Friday, August 27, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 192. 'ராகு - கேது பகவான்கள்' (நாகராஜன்) வரமா ? சாபமா ?


 'ராகு - கேது பகவான்களின்' அமைவு, ஜாதகத்தில் எதைக் குறிப்பிடுகிறது ?

இதை, தோஷம் என்றும்... சாபம் என்றும்... இன்றைய ஜோதிடம் பிரதாபித்து வருகிறது. ஆனால், இது, உண்மையில், 'வாழ்வின் உண்மையான சாரம் எது... ?' என்பதை, உணர்த்துவதற்கான ஒரு வரம்தான்... என்பதை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் புரிய வரும்.

'சுவர்பானு'(நாகராஜன்)  என்ற அசுரன், மோகினி வடிவத்தில் இருந்த 'பகவான் நாராயணன்' பகிர்ந்தளித்த அமிர்தத்தை அருந்தியதற்குப் பின், 'சூரிய - சந்திர பகவான்களின்' சுட்டிக் காட்டுதலால், பகவானால் தண்டணை அளிக்கப்பட்டு, தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்படுகிறான். அமிர்தத்தை உண்டதனால், 'சிவபெருமானாரின்' அனுக்கிரகத்தினால், 'ராகு பகவானாகவும்'... 'கேது பகவானாகவும்'... நவக்கிரகங்களில், நவக்கிரக நாயகர்ளாக நியமிக்கப் படுகிறார்கள்.

'கிருத, திரேதா, துவாபர யுகங்களில்', நான்கு பங்கு தர்மத்துடன் வாழ்ந்த மாந்தர்களின் வாழ்வு, ஒவ்வொரு யுகமாக மூன்று, இரண்டு என்று குறைந்து, தற்போதைய 'கலியுகத்தில்', தர்மம் ஒரு பங்காகவும்...அதர்மம் மூன்று பங்காகவும்...மாறியிருக்கிறது. மனிதர்களின் வாழ்வை அதர்மத்திலிருந்து மீட்டு, மீண்டும் தர்மத்தின் வாழ்வு வழியே பயணிக்க வைப்பதற்கான பணிகளைத்தான், 'ராகு - கேது பகவான்கள்' தங்களது 'காரகத்துவங்களாக' கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.

அவரவர்களின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப, அவர்களின் 'பாபங்களை' ராகு பகவானும்... அவற்ற்லிருந்து மீளும் உபாயத்தைச் சுட்டிக் காட்டும் 'புண்ணியங்களை' கேது பகவானும், ஜாதகத்தில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உதாரணமாக, 'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒருவருக்கு, 2 ஆம் பாவத்தில் 'ராகு பகவானும்'... 8 ஆம் பாவத்தில் 'கேது பகவானும்' அமைகிறார்கள்... என்று வைத்துக் கொள்வோம் :

2 ஆம் பாவத்தில் அமர்ந்த ராகு பகவான் : 'தனம் - குடும்பம் - வாக்கு' என்ற பாவத்தில் அமைந்து, 'இல்வாழ்வு', குடும்பம் என்ற உலக வாழ்வுச் சூழலில், ஜாதகர், மீள்வதற்கு முடியாதவாறு சிக்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

8 ஆம் பாவத்தில் அமர்ந்த கேது பகவான் : 'ஆயுள் ' என்ற 'பரம இரகசியமான' பாவத்தில் அமைந்து, ஒரு ஜீவனின் வாழ்வு எவ்வாறானது ? என்ற வாழ்வின் உண்மையை உணரவைத்து, ஞானத்தை அளித்து, தனது 'கர்ம வினைகளைக் களைந்து' போக வைப்பதற்கான, வல்லமையைத் தந்தருள்கிறார்.

இப்போது, புரியுமே ! 'ராகு - கேது பகவான்களின் அமைவு 'சாபமல்ல... வரம்தான்...' என்ற உண்மை 1!

ஸாய்ராம்.


Saturday, August 14, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 191. 'லகனமும் - இராசியும்'... 'உணர்வும்,,, உணர்ச்சிகளும்'


'லக்னம்'... 'ஆத்மா' என்ற 'உள்ளுணர்வை' பிரதிபலிக்கிறது. 'இராசி'... 'உடல்' என்ற ஜீவனின், மனம் சார்ந்த 'உணர்ச்சிகள்' நிறைந்த. உலக வாழ்வை' பிரதிபலிக்கிறது.

ஆதலால்தான், 'லக்னம்' என்ற ஆத்மாவை உள்ளடக்கிய ஜீவன், 'இராசி' அமைந்திருக்கிற 'நட்சத்திரத்தின் சாரம்' பெற்ற 'கிரகத்தின் தசாவின்' வழியே, தனது வாழ்வை அமைத்துக் கொள்கிறது.

'சூரிய பகவானை' ஆதாரமாகக் கொண்டுதான் லக்னம் அமைகிறது. ஆத்மாவை வருணிக்கும் போது அதை, 'ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம்' கொண்டதாக வருணிக்கிறது வேதாந்தம். அந்த ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் கொண்ட ஆத்மா, ஒரு ஜீவனுக்குள் பிரவேசிக்கும் போது, 'சத்து - சித்து - பரமானந்தம்' என்ற 'ஏக உணர்வாகவும்', அதுவே, ஜீவனுக்கு வெளியே பிரதிபிம்பிக்கும் போது, 'சூரிய பகவானாகவும்' அமைகிறது.

'ஏக உணர்வாக' இருக்கும் ஆத்மாவிலிருந்துதான், 'உணர்ச்சிகளின் கலவையான' ஜீவனின் வாழ்வு உருவாகிறது. 'சத்து' என்ற சத்தியத்தையும்... 'பரமானந்தம்' என்ற என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தையும்... உள்ளடக்கியிருந்தாலும்... இந்த ஜீவனின் பிறவிக்கு ஆதாரமான 'கர்மா' என்ற 'பூர்வ புண்ணிய - பாப வினைகளை', 'சித்தம்' என்ற மனதில் இருந்து, அலை அலையாக எண்ணங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த எண்ணங்கள் விளைவிக்கும் 'இன்ப- துன்பங்களைத்தான்', 'வளர் பிறை - தேய் பிறை' என்ற இருவேறு நிலைகளாக 'சந்திர பகவான்' வெளிப்படுத்துகிறார்.

ஜீவன், அதன் மூலமான ஆத்மாவில் சங்கமிப்பதைத்தான், சமாதி... முக்தி... என்கிறோம். அது, 'உணர்ச்சிகளடங்கிய' ஜீவன், 'ஏக உணர்வாக' இருக்கும் ஆத்மாவில் சங்கமிப்பதாகும்.

இதைத்தான், ஜோதிடக் கலை, லக்னமாகவும், இராசியாகவும்... 'சூரிய பகவானையும்', 'சந்திர பகவானையும்' ஆதாரங்களாகக் கொண்டு விளக்குகிறது.

ஸாய்ராம்.


Saturday, August 7, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமம் பகுதி - 190. கனவு


நாம் அன்றாடம் அனுபவிக்கும் மூன்று அவஸ்தைகள்... ஆழ்ந்த தூக்கம், கனவு, விழிப்பு .

'ஆழ்ந்த தூக்கத்தில்' நாம் ஒன்றும் உணர்வதில்லை. ஏனெனில் நமது உணர்வு, அந்தப் பேருணர்வுடன் ஒன்றி விடுகிறது.

'விழிப்பு நிலையில்', நமது மனம் வெளியே பிரவேசித்து விடுகிறது. நாம் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் செய்ல்களில் மனம் தொடர்ந்து ஈடுபடுவதால், நம்மை, நமது உள்ளுணர்வை, நம்மால் கவனிக்க முடியாமல் போகிறது.

இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்தான் 'கனவு நிலை'. இதை மனம் தொழில் விட்ட நிலை என்று கூறலாம். உடல்தான் ஓய்ந்திருக்கிறதே தவிர, மனம் ஓய்வாக இருப்பதில்லை. அதில் தோன்றுவதைத்தான் 'கனவு' என்று கூறுகிறோம்.

இந்தக் கனவுகளை இரண்டு பொதுப் பிரிவுகளாக... 'காட்சிகள்' எனவும்... 'நினைவுகள்' எனவும்... பிரித்துக் கொள்ளலாம்.

'நினைவுகள்' என்பது, நமது 'மனம் தொழில் விட்ட சூழலில்'... அன்றாடம் நாம் கடந்து போகும் நினைவுகளை அசை போட்ட வண்ணம் இருக்கும் நிலை. தொடர்ந்து நமது எண்ணங்கள் போலவே மாறிக் கொண்டே இருக்கும் இந்தக் கனவுகள், நாம் விழிக்கும் போது, நமது ஞாபகத்தில் இருப்பதில்லை.

'காட்சிகள்' என்பதுதான்... கனவின் ஒரு அற்புத நிலை. இது நமது மனம் அன்றாடம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் 'மனம் விட்டத் தொழில்களை' விட்டு விட்டு, மனம் நினைத்தே பார்க்காத... 'ஒரு காட்சித் தொகுப்பைக்' காட்டும். அந்தக் காட்சித் தொகுப்பைத்தான், உண்மையான 'கனவு' என்று கூறுகிறோம்.

இந்தக் 'காட்சித் தொகுப்பு' என்ற கனவினைக் கண்டு முடித்த பின், நாம் விழித்துக் கொள்வோம். உடனடியாக நாம் செய்யும் இரண்டு செயல்கள்.. ஒன்று கடிகாரத்தைப் பார்ப்பது, இரண்டாவது, தண்ணீர் குடிப்பது. அதற்குப் பின், நெடு நேரம் அந்தக் காட்சியையே நினைத்துக் கொண்டிருந்து விட்டு, தன்னையறியாமல் உறங்கிப் போவோம்.

இது போன்ற 'காட்சிகளாலான தொகுப்பைத்தான்' கனவு என்கிறோம். 'இது நமது ஜீவனுக்கு, ஆத்மா உணர்த்துகிற ஒரு அறிவிப்பு'. இந்த கனவு நிலைக்குத்தான், கனவிற்கான பலன்களை' அளிக்கிறோம்.

ஸாய்ராம்.



ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...