'சைவம்' என்ற சிவ வழிபாடு செய்வதைக் குறிக்கும் லக்னங்களுக்கு (மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன இராசி வீடுகள்) அமையும் 'திரிகோண வீடுகளும்', அதே வழிபாடுகளுக்குள் அடங்கிய 'இராசி வீடுகளாக' அமைவதும் ஒரு அற்புத அமைவுதான்.
உதாரணமாக, 'ஸ்ரீ முருக பகவானை' அதிதேவதையாகக் கொண்ட 'மேஷ லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு, இரண்டாவது திரிகோணமான 'பூர்வ புண்ணிய ஸ்தானமான', 'சிம்ம இராசிக்கு' அதிபதியான 'சூரிய பகவானுக்கு' அதிதேவதையாக... 'சர்வேஸ்வரனே' அமைகிறார். மேலும், மூன்றாவது திரிகோணமான 'பாக்கிய ஸ்தானமான' 'தனுசு இராசிக்கு' அதிபதியான 'குரு பகவானுக்கு' அதிதேவதையாக... 'ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவானே' அமைகிறார்.
இவ்வாறாக, 'சைவம்' என்ற சிவ வழிபாட்டைக் குறிக்கும், 'மேஷ லகனத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு, 'லக்னம்', 'பூர்வம்' மற்றும் 'பாக்கியம்' என்ற 'திரிகோணங்களுக்கும்', முறையே 'ஸ்ரீ முருக பகவான்', 'சர்வேஸ்வரன்' மற்றும் 'ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவான்கள்'... என முறையாக அமைந்திருப்பதுதான் அற்புதம்.
அது போலவே, 'வைணவம்' என்ற 'பெருமாள்' வாழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட லக்னனங்களுக்கு (ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப இராசிகள்) அமையும், 'திரிகோண விடுகளும்' அதே வழிபாடுகளுக்கு இணையாக அமைவதும் அற்புதம்தான்.
உதாரணமாக, 'ஸ்ரீ ரெங்கநாதப் பிரபுவை' அதிதேவதையாகக் கொண்ட 'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு, 'இரண்டாவது திரிகோணமாக' அமைகிற 'பூர்வ புண்ணியாதிபதியான' புத பகவானின் அதிதேவதையாக...'ஸ்ரீ வரதராஜப் பெருமாள்' அமைகிறார். அதுபோலவே, 'மூன்றாவது திரிகோணமாக' அமைகிற 'பாக்கியம்' என்ற சனி பகவானின் அதிதேவதையாக... 'ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாளே' அமைவதும், அற்புத அமைவுதானே.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment