ஆனால், அவர் ஊக்குவித்த ஒரே 'துவித விருத்தி', 'கிரி உருவமாக' இருக்கும் 'அருணாச்சலம் என்ற அண்ணாமலையாரை' சுற்றி வருவதைத்தான். இந்த 'துவிதம்' என்ற, உலக விருத்தியை அவர் ஆதரித்தது மட்டுமல்ல... அவரும் அதைக் கடைப் பிடித்து, கிரமமாக கிரி வலம் செய்துவந்தார்.
பகவானின் இந்த உள்ளுணர்வைத்தான், பகவானுடனேயே இருந்த 'சாது ஓம் சுவாமிகள்'... தனது 'ரமண வழி' என்ற 'சாதனை சாரத்தில்'... 'ஸ்ரீ அருணாசலப் பிரதக்ஷிண மாண்பு' என்ற தலைப்பின் கீழ் வரும் 455 ஆவது பாடலில் குறிப்பிடுகிறார்.
'துவித விருத்தியினாற் றூர வகற்றும்
விவிதகரு மங்களினும் வேறாய் - சவிதாவைத்
தூரவில காத துவித விருத்திவலஞ்
சேர வருவதிதைச் செய்.'
பொழிப்புரை : 'விதவிதமான எந்தக் கருமமும் மனதின் துவித விருத்தியே. அதனால், எந்தக் கருமம் செய்தாலும் அது ஒருவனை அவனின் ஆன்ம மத்தியிலிருந்து மேலும், மேலும் தூரத்திலேயே அகற்றி வைக்கும். ஆனால், இதற்கு ஒரு விதி விலக்கு ஒன்று உண்டு. அதாவது, ஞான சூரியனாகிய அருணாச்சலத்தை விட்டுத் தூர விலகிச் செல்லாதபடி, இந்த அருணாச்சலத்தை பிரதக்ஷிணம் செய்வதுதான்
ஸ்ரீ ரமணாய நமஹ.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment