'சனி பகவான்' வலிமை மிகுந்து அமைந்திருக்கும் ஜாதகங்களின் இரண்டாவது வகை...
2. 'சனி பகவான்'... 'ஆட்சி' மற்றும் 'உச்ச பலம்' பெற்ற அமைவைப் பெற்ற... 'சனி பகவானுடன்' பகை பெற்ற இராசிகளான 'மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக இராசிகள்', 'லக்னமாக' அமையும் பட்சத்தில், 'சனி பகவானின்' தசாக் காலம் நடைபெறும் போது, பெரும்பாலும், சற்று கடினமான காலமாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
அவ்வாறு அமையும் போது ஏற்படும் விளைவுகளையும்... அதிலிருந்து மீளும் உபாயங்களையும்... உதாரணத்துடன் ஆய்வோம்.
உதாரணமாக...
'கடக லக்ன' ஜாதகருக்கு, 8 ஆம் பாவமான, ஆயுள் பாவத்தில், ஆயுள் ஸ்தானாதிபதியாகிய 'சனி பகவான்' ஆட்சி பலம் பெற்று அமைந்து... அவரின் 19 வருட 'தசாக் காலம்'... 'இளமைக் காலமாக' அமைந்தாலும்... 'மத்திமக் காலமாக'மைந்தாலும்... சற்றுக் கடினமான சூழல்களை எதிர் கொண்டு... போராடித்தான், வாழ்வைக் கடக்க வேண்டியிருக்கும்.
* வாழ்வின் ஒவ்வொரு கடமையையும், போராடித்தான் கடக்க வேண்டியிருக்கும். அந்த போராட்டம் இறுதியில் வெற்றியையும் அளிக்கும். ஆனால் இந்தத் 'தொடர் போராட்டம்'... ஜாதகருக்கு பெரும் அயர்வைக் கொடுக்கும். இறுதியாக கிடைக்கும் வெற்றியை, கொண்டாடி மகிழ முடியாத சூழல் ஏற்படும்.
* தான் எவ்வளவு தகுதி பெற்றிருந்தாலும்... அந்தத் தகுதிக்கு ஏற்ற துறைகள் அமையாத சூழலும்... அவ்வாறு அமைந்தாலும், அதிலும் மிகத் தாழ்வான நிலையிலிருந்து கடினமாக உழைத்து முன்னேறித்தான்... உயர் ஸ்தானத்தை அடையக் கூடிய சூழலும்... எப்போதும் 'கட்டுண்டு இருப்பதாகவே' எண்ணும் சூழலும்... அமைந்து விடும்.
* தான், தர்மத்துடனும்... நியாயத்துடனும்... நேர்மையுடனும்... நடந்து கொண்டாலும், தனது வார்த்தைகளும்... நிலைப் பாடுகளும்... தனது பொருளாதரச் சூழலைக் காரணம் காட்டி... சம்பந்தப் பட்டவர்களால், புறம் தள்ளப் படும் நிலை உருவாகும்.
...இந்த சூழல்களை எதிர் கொள்ளவும்... இதிலிருந்து விடுபட்டு மன நிம்மதியுடன் கடந்து போவதற்கும்... சில, ஜோதிட ரீதியான உபாயங்களைக் கையாளாலாம்.
# 'கடக லக்னத்திற்கு' மிகவும் யோகத்தை அளிக்கக் கூடியவர்களாக லக்னாதிபதியான 'சந்திர பகவானும்'... பூர்வம் மற்றும் ஜீவனத்திற்கு அதிபதியான 'செவ்வாய் பகவானும்'...பாக்கியத்திற்கு அதிபதியான 'குரு பகவானும்' அமைகிறார்கள்.
# தான் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும், சுபக்கிரகங்களின் தலைமையில் முன்னனியாக இருக்கும் 'குரு பகவானுக்கு' உகந்த 'வியாழக் கிழமைகளில்' மேற்கொள்வது உத்தமமாக இருக்கும்.
# இந்த மூவரில்... 'கடக லக்னத்திற்கு' மிகவும் யோகாதிபதியாகக் கருதப் படுபவர்... 'செவ்வாய் பகவான்' ஆவார். ஆகவே, ஆற்றல் காரகரான... 'செவ்வாய் பகவானின்' ஆளுமைக்குண்டான, 'எண் கணித எண்ணான' 9 ல்... தனது பெயரின் கூட்டு எண் அமையுமாறு அமைத்துக் கொள்வதும் உத்தமமாக இருக்கும்.
# சனிக் கிழமைகளிலோ... திகதிகளில் 8, 17 மற்றும் 26 வரும் நாட்களிலோ... திகதி-மாதம்-வருடம் கூட்டி வரும் எண், 8 ஆக வரும் நாட்களிலோ... முக்கிய பணிகளைத் தவிர்ப்பது நலம் தரும்.
# பூர்வ புண்ணியங்களை அள்ளித் தரும் 'செவ்வாய் பகவானின்' அதி தேவைதாயான 'முருகக் கடவுளையும்'...பொறுமையையும், ஞானத்தையும் அளிக்கும் 'குரு தக்ஷணாமுர்த்தி பகவானையும்'...வழிபடுவது, 'சனி பகவானின்' 19 வருடங்களை, மிக எளிதாகக் கடந்து போவதற்கான வல்லமையைத் தந்து விடும்.
'சனி பகவான்' அஞ்சி நடுங்கக் கூடியவரல்ல. நடுவு நிலையில் நின்று ஆயுளையும்... அதில் அடங்கியிருக்கும் கர்ம வினைகளையும்.. பரிபாலனம் செய்யும் கடமை தவறாத அருளாளர். இதை உணர்ந்து கொள்ளும் போது... அவரின் ஜாதக அமைவு 'நட்பாக' இருந்தாலும்... 'நட்பு இல்லாத' நிலையாக இருந்தாலும்... நிம்மதியாகவும், பூரணமாகவும்... கடந்து செல்லாம்.
பொதுவாகவே, 'சனி பகவானின்' தசாவைக் கடந்தவர்கள் அனைவரும், 'பெரும் அனுபவங்களைச்' சுமந்து கொண்டிருப்பார்கள். அந்த அனுபவங்கள், அவரவர்களின் 'தேர்ந்தெடுப்புகளுக்கு' ஏற்பவே அமைந்திருக்கும்.
ஸாய்ராம்.

Ur contact no
ReplyDeleteநன்றி.
ReplyDelete