'சனி பகவான்', வலிமை மிகுந்து அமைந்திருக்கும் ஜாதகங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்...
1. 'சனி பகவான்' ஆட்சி பெற்றிருக்கும், 'மகரம்' மற்றும் 'கும்ப இராசிகளும்'... நட்பு இராசிகளான 'ரிஷபம், மிதுனம், கன்னி, துலா இராசிகளும்'... 'சம நட்பு' மிக்க 'தனுர் மற்றும் மீன இராசிகளும்'... 'சனி பகவானுக்கு' மிக உகந்த வீடுகளாக அமைகிறது.
இவற்றில் 'சனி பகவான்' அமர்ந்து, அவரின் தசா நடக்கும் போது, பெரும்பாலும் நன்மையான பலன்களை... அதாவது அந்த ஜாதகத்தில், அவரமரும் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப, ஜாதகரின் புண்ணிய பலன்களை அளிக்கத் தவறுவதில்லை.
உதாரணமாக...
'கும்ப லக்ன' ஜாதகருக்கு, லாப ஸ்தானமான 11 ஆம் பாவத்தில், 'பூராடம் 2 மற்றும் 3 ஆம் பாதத்தில்', 'சனி பகவான்' அமர்ந்து... அவரது தசா நடக்கும் காலம்... 'குரு பகவானின்' சுபத்துவத்திற்கு ஏற்ப...
* ஜாதகரின் உழைப்பு அனைத்தும்... சிதறாமல், பெரும் பயன்களை அளிக்கக் கூடியதாக அமையும்.
* ஜாதகரின் வயதிற்கு ஏற்ப, அவரது கடமைகள் அனைத்தும், பூரணமாக நிறைவேற்றப் படும்
* அவரின் பூர்வ சொத்துக்களில், இவரின் உழைப்பும் சேர்ந்து, அவை பல் மடங்காகப் பெருகுவதுடன்...இவரின் தலை முறைகளும் அனுபவிக்கக் கூடிய வகையில் 'அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்' சேரும் வாய்ப்புகள் கூடி வரும்.
* தன்னோடு சேர்ந்து பணியாற்றும் அனைவருடனும் ஒத்திசைவுடன், இசைந்து பயணித்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றங்களில் அக்கரை செலுத்துபவராக அமைவார்.
# அவர்கள் கடை பிடிக்க வேண்டியவைகள் :
~ தனது செயல்களை 'தர்மத்துடனும் - நியாயத்துடனும் - நேர்மையுடனும், எதிர் கொள்வது முக்கியம்.
~ தான் மேற்கொள்ளும் செயல்களை, 'வெள்ளிக் கிழமைகளிலும்'... 'புதன் கிழமைகளிலும்'...5 மற்றும் 6 ஆம் தேதிகளிலும்... 'சுக்கிர, புத ஹோரைகளிலும்'... மேற்கொள்ளும் போது, வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.
~ தனது பெயரை, 'எண் கணித முறையில்'... கூட்டு எண்கள் 5 மற்றும் 6 வருமாறு, மாற்றிக் கொள்ளும் போது, இன்னும் பலன்களில் மேம்பாடு ஏற்பட வாய்ப்புகள் கூடி வரும்.
~ வழிபாடுகளைப் பொருத்தவரை... 'சனி பகவானுக்கு' உரிய அதி தேவதையாக 'ஸ்ரீநிவாஸப் பெருமாள்' அமைகிறார். அவரை 'சனிக் கிழமை' தோறும், ஈடுபாட்டுடன் வழிபட்டு வர,அவரின் கருணை பெருகி... ஜாதகரின் வாழ்வு வளம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தொடர்ந்து... 'சனி பகவான்' வலிமை இழந்து இருக்கும் போது, ஏற்படும் அமைவையும்... அவற்றின் விளைவுகளையும்... அவற்றிலிருந்து மீள்வதற்கான உபாயங்களையும், ஆய்வோம்...ஈஸ்வரனின் அருளோடு.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment