நமது முயற்சியினாலும் , முனைப்பினாலும், இறைவனிடம் பக்தியை (இயமம்) வளர்த்து... வாழ்வை ஓர் ஒழுங்குக்குள் (நியமம்) கொண்டு வந்து... நமக்கியல்பான ஒரு இருப்பு நிலையில் (ஆசனம்) அமரும் போது, 'இறைவனின் கருணை' நம்மீது கனிகிறது.
அந்தக் கருணையினால், 'ஒரு சத்குருவின்' திருவடிகளுக்குள் கொண்டு நம்மை சேர்க்கும் 'இறையருள்', நமது சுவாசத்தை பிரம்மாந்திரத்தை நோக்கியதாக (பிராணாயாமம்) திருப்புகிறது. அப்போது, நம்மை உலக வாழ்விலிருந்து திருப்பும் வண்ணமாக, வெளி உலக வாழ்விற்கான எண்ணங்கள் அற்ற நிலை (பிரத்யாகாரம்) அனுபவமாகிறது.
இந்த படி நிலையில் இருக்கும் போது, நமது 'ஜீவ சக்தியான' வாயுவை, அதன் பூர்வ... இயல்பான... பாதையில் 'இடைவிடாது' செலுத்துவதற்கான ஆற்றல் வந்து சேர்கிறது. இந்த ஆறாவது படி நிலைதான் 'தாரணை' என்பதாகிறது.
'இடைவிடாது...'என்பது, தொடர்ந்து செயல்படுதல்... எனப்துதான். பாத்திரத்தில் இருக்கும் நெய்யை, ஒரு கரண்டியில் எடுத்து, ஒரு குவளையில் விடும் போது... கரண்டியிலிருந்து வழிய ஆரம்பிக்கும் நெய்... இடைவிடாது தொடர்ந்து வழிந்து... அந்த குவளையில் சேரும் வரை... ஒரு நூல் போல இடைவிடாது வழிவதைப் போன்றதுதான் 'தாரணை' யாகும்.
இந்தத் 'தாரணை' என்ற படிநிலைதான் அட்டாங்க யோகத்தின் ஆறாவது படி நிலையாகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment