ஜாதகத்தில் அமைந்திருக்கிற, 'கிரகங்களின் அமைவுகள்', அந்த ஜாதகரின், இந்தப் பிறவிக்கான, 'கர்ம வினைகள்' எவ்வாறு வெளிப்படப் போகின்றன... என்பவற்றை, சுட்டிக் காட்டுகின்றன.
அந்தக் கர்ம வினைகள், ஜாதகரின் வாழ்வில், எந்தெந்தக் கட்டங்களில், எவ்வாறெல்லாம் வெளிப்படப் போகின்றன என்பதை, அவரது 'தசா, புத்தி மற்றும் அந்தரத்தை' நடத்தும், கிரகங்கள்தான் தீர்மானிக்கின்றன. ஆதலால்தான், தசாக்களை, 'வாழ்வை கடந்து போகும் பாதை' ( Direction of life ) என்கிறோம்.
இந்த தசா, புத்தி, அந்தரத்தை நடத்தும் கிரகங்கள், ஜாதரின் கர்ம வினைகளின் விளைவுகளைத்தான், தங்களுக்கான காலங்களில் வெளிப்படுத்துகின்றன. என்ற போதும்... இவை மூன்றுக்கும் இடையேயான தொடர்புகளும், ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. அவற்றை... ;
* அவைகளளின், 'ஆதிபத்தியங்கள்'.
* அவைகளுக்கு இடையேயான 'நட்பு மற்றும் பகை நிலைகள்.
* அவைகளின் கோள் சார நிலைகள்.
... என்று பகுக்கலாம்.
# தசா - புத்தி - அந்தரங்களின் ஆதிபத்தியங்கள் :
உதாரணமாக, 'மேஷ லகன' ஜாதகருக்கு, 'செவ்வாய் பகவானின் தசாவில்... குரு பகவான் புத்தியில்... சூரிய பகவானின் அந்தரம்' நடப்பதாகக் கொள்வோம்.
ஜாதகத்தில், இந்த மூன்று கிரகங்களின் ஆதிபத்தியங்களும், மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. 'செவ்வாய் பகவான்'... லக்னாதிபதியாகிறார். 'குரு பகவான்'... பாக்கியாதிபதியாகிறார். 'சூரிய பகவான்' பூர்வ புண்ணியாதிபதியாகிறார்.
இவர்களின் 'ஸ்தான பலங்கள்' ஜாதகத்தில், எவ்வாறாக அமைந்திருப்பினும்... அவைகளின் 'ஆதிபத்திய பலங்களினால், இந்த மூன்று கிரகங்களின் தசா - புத்தி - அந்தரக் காலங்கள்', ஜாதகரின் வாழ்வில், அவர் தனது, 'புண்ணிய பலன்களை, அனுபவிப்பார் என்பது நிச்சயம்.
அது போலவே, அதே ,மேஷ லக்ன ஜாதகர்', 'புத பகவானின் தசாவில்...சனி பகவானின் புத்தியில்... சுக்கிர பகவானின் அந்தரம்' நடப்பதாகக் கொண்டால்... அவர்களின் 'ஸ்தான பலங்கள்' எவ்வாறாக அமைந்திருந்தாலும்... அவர்களின் 'ஆதிபத்தியங்களின்' நிலைகளினால், பெரும்பாலும், ஜாதகர் தனது பாப வினைகளை அனுபவிக்க நேரிடும் என்பதும் நிதர்சனம்தான்.
தொடரும் பகுதிகளில்... 'நட்பு மற்றும் பகை நிலைகளையும்... கோள் சாரங்களைப் பற்றியும்... தொடர்ந்து ஆய்ந்து அறிவோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment