Saturday, February 27, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : 159. 'சிறு மாற்றம் தரும் பெரும் விளைவுகள்' - பகுதி 3. பெயரியல் 'Namology'


... சென்ற பகுதியின் தொடர்ச்சி...

(... இந்த இரண்டு முறைகளையும்... 'ஜோதிடக் கலையின்' ஆதாரமான 'ஜாதகங்களின்' வழி காட்டுதலுடன் கையாண்டு நமது பெயர்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு... அதன் வழியே வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்...)

2. நேமாலஜி ( Namology) என்ற பெயரையே மாற்றிக் கொள்ளும் 'பெயரியல்                    கலை' முறை :

நமது பெயரை மாற்றிக் கொள்வதற்கு, இந்தக் கலை வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், அதற்கான வழி முறைகள்... 'எண் கணிதத்தைப்' ( Numerology )  போன்றே பிறந்த தேதி எண் மற்றும் மாத, வருடத்தின் கூட்டு எண், இவற்றை மூலமாகக் கொண்டே அமைக்கப் படுகிறது.

ஆனால், இந்தக் கலைக்கான அடிப்படை அம்சங்கள், 

- நமது புரதான 'ஜோதிடக் கலையிலும்'...

- நமது, 'குலம் - குடி - குடும்பம்' என்ற, ஒரு கட்டமைப்பிலும்...

... இருப்பதால், இவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பெயரை மாற்றும் போது, அது வாழ்வின் தடங்கலை நீக்கி... பயணத்தை நிறைவாக்குகிறது.

உதாரணமாக...

ஒருவருக்குத் திருமண வாழ்வு மிகவும் தாமதமாகிக் கொண்டே இருந்தது. ஜாதக ரீதியாகக் கணித்தக் காலங்களும் கடந்து கொண்டே இருந்தன. இறை வழிபாடுகள்... முயற்சிகள்... என எண்ணற்ற வழி முறைகளை கையாண்டும், தாமதம் நீண்டு கொண்டே இருந்தது.

J. SARAVANAN - 1 + 3 + 1 + 2 + 1 + 6 + 1 + 5 + 1 + 5 = 26 = 8 

அப்போதுதான், 

* அவரது பெயர் எண்ணின் கூட்டுத் தொகை '8' என்பதாக அமைந்திருந்ததைக் கவனித்தோம். 

* மேலும், அவர் பெயரின், முதல் எழுத்து, அவரது நட்சத்திரத்திற்கான எழுத்துக்களில், அமையாததையும் கவனித்தோம்.

* அது மட்டுமல்ல... குலமும், குடியும், குடும்பமும்... 'விஷ்ணு குலமாகவும், அவரையொட்டிய திருநாமமிடும் சுவாமிகளை வணங்கும் குடி மக்களாகவும், அவரின் குடும்ப மூதாதையர்களின் பெயர்கள், பெருமாளைக் குறிக்கும்... 'ராஜ கோபாலன், ஜெகநாதன், ரெங்கநாதன், கிருஷ்ண முர்த்தி...' என்பதாக இருப்பதையும் கவனித்தோம்.

இந்த மூன்று நிலைகளையும், முறையாக மாற்றியமைத்தோம்.

# பெயரின் கூட்டுத் தொகையை, 'எண் கணித முறையை' ( Numerolgy ) பயன் படுத்தி, அவரின் யோகாதிபதியாகிய 'புத பகவானின்' எண்ணான '5' என்ற எண்ணிற்கு வருமாறு மாற்றியமைத்தோம்.

# அவரின் நட்சத்திர எழுத்துக்களில் ஒன்றான 'தி' என்ற எழுத்தில் பெயரமையுமாறும் பார்த்துக் கொண்டோம்.

# இறுதியாக... அவரின், 'குல-குடி-குடும்ப வழக்கத்தின வழியாக', விஷ்ணு பகவானின் நாமங்களில் ஒன்றைக் குறிப்பதையும் உறுதி செய்து கொண்டோம்.

இவ்வாறு அமைக்கப் பட்ட பெயர்தான், 

J. THIRU NARAYANAN ( ஜெ. திரு நாரயணன் ) 

    1 + 4 + 5 + 1 + 2 + 6 + 5 + 1 + 2 + 1 + 1 + 1 + 5 + 1 + 5 = 41 = 5. புத பகவான்.

இந்தப் பெயருக்கு மாறி. அதை அவர் தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருக்கும் போது, அது வரை அமையாத திருமண வாழ்வும், தானே வந்து அமைந்தது. அதில், ஆச்சிரியம் என்னவெண்றால்... அந்தப். பெண்ணின் பெயர், விஷ்ணு பகவானின் குலத்திற்கே ஏற்ப, DHANALAKSHMI (தனலக்ஷ்மி) என்றே அமைந்ததுதான்.

இன்று, இரு குழந்தைச் செல்வங்களுடன், அவர்களின் வாழ்வு இனிதே தொடர்கிறது.

அதற்குக் காரணம், 'எண் கணித மாற்றமோ'... 'பெயரியல் மாற்றமோ'... அல்ல, இந்த இரண்டு கலைகளையும்... 'நமது புரதான ஜோதிடக் கலையின்' அடிப்படைகளைக் கொண்டு அணுகியதுதான்.

இது போலவே, சில இக்கட்டன சூழல்களில், இந்த இரண்டு முறைகளையும், ஜொதிட ரீதியான அணுகுமுறையைக் கையாண்டு... அதன் வழியே பெரும் மாற்றங்களை அனுபவிக்கலாம். 

'ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றை, பரிசிலின் துணை கொண்டு கடப்பதைப் போல, விதியின் வழியேயான வாழ்வை, மதியைக் கொண்டு கடந்து விடலாம்'.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...