முன் பகுதியின் தொடர்ச்சி...
(... இந்த தசா, புத்தி, அந்தரங்களை நடத்தும் கிரகங்கள், ஜாதகரின் கர்ம வினைகளின் விளைவுகளைத்தான், தங்களுக்கான காலங்களில் வெளிப்படுத்துகின்றன. என்ற போதும்... இவை மூன்றுக்கும் இடையேயான தொடர்புகளும், ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன... )
# தசா, புத்தி, அந்தரங்களுக்கு இடையேயான நட்பு மற்றும் பகை நிலைகள்
உதாரணமாக, 'மீன லக்ன' ஜாதகருக்கு, 'குரு பகவானின் தசாவில்... புத பகவானின் புத்தியில்...செவ்வாய் பகவானின் அந்தரம்' நடப்பதாகக் கொள்வோம்.
மீன லக்னத்திற்கு, 'லக்னம் (1) மற்றும் ஜீவன (10) பாவங்களுக்கு' அதிபதியான 'குரு பகவானின்' தசா, மிகவும் உத்தமமான தசாதான்.
அது போல 'சுகம் (4) மற்றும் களத்திரம் (7) என்ற பாவங்களுக்கு' அதிபதியான 'புத பகவானின்' புத்தியும், மிகவும் உத்தமாமான புத்திதான்.
மேலும், 'தன-வாக்கு-குடும்ப பாவம்' (2) மற்றும் 'தர்ம-பாக்கிய பாவங்களுக்கு' (9) அதிபதியான 'செவ்வாய் பகவானின்' அந்தரமும், மிகவும் உத்தமமான அந்தரம்தான்.
ஆனால், லக்னாதிபதிக்கு நன்மையை அளிக்க வேண்டிய 'குரு பகவான் தசாவின் - செவ்வாய் பகவானின் அந்தரம்'... அவர்களுக்கு இடையே அமைந்துள்ள, 'செவ்வாய் பகவானுக்கு' பகையாக உள்ள 'புத பகவானின்' புத்தியின் காரணத்தால்... தனது புண்ணிய பலன்களை அளிப்பதில்லை.
# தசா, புத்தி, அந்தரங்களின் 'கோள் சார நிலைகள் :
உதாரணமாக, 'கும்ப லக்ன' ஜாதகருக்கு, 'சனி பகவானின் தசாவில்... குரு பகவானின் புத்தியில்...புத பகவானின் அந்தரம்', நடப்பதாகக் கொள்வோம்.
'கும்ப லக்னத்திற்கு', லக்னாதிபதியாகிய (1) 'சனி பகவானின்' தசா மிகவும் உத்தமமான தசாதான்.
அது போல, 'தன-வாக்கு, குடும்ப' (2) பாவத்திற்கும், 'லாபம்' என்ற 11 ஆம் பாவத்திற்கும், அதிபதியாகிற 'குரு பகவானின்' புத்தியும், மிகவும் உத்தமமான புத்திதான்.
மேலும், 'பூர்வம் (5) மற்றும் ஆயுள் (8) பாவங்களுக்கு அதிபதியாகிற 'புத பகவானின்' அந்தரமும், மிகவும் உத்தமமான அந்தரமே.
இருப்பினும், தசா நாதனுக்கும் (லக்னாதிபதியாகிற 'சனி பகவான்'), அந்தர நாதனுக்கும் (பூர்வ புண்யாதிபதியாகிற 'புத பகவான்'), இடையேயுள்ள புத்தி நாதனான (தன-லாபாதிபதியாகிற...) 'குரு பகவான்', 'கோள் சாரத்தில்', ஆட்சி, உச்சம் பெற்று, வலிமையாக அமையும் போது மட்டுமே, ஜாதகர், தனது புண்ணிய பலன்களை அனுபவிப்பார்.
அதே நேரத்தில், 'குரு பகவான்' கோள் சாரத்தில், வலிமையற்று... 'நீச நிலையில்', பலமிழந்து நிற்கும் போது, ஜாதகர் அனுபவிக்க வேண்டிய 'புண்ணிய பலன்கள்', அவரின் அனுபவத்திற்கு வராமல் போவதை அனுபவத்தில் காணலாம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment