Friday, February 26, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : 158. 'சிறு மாற்றம் தரும் பெரும் விளைவுகள்' - பகுதி 2. எண் கணிதம் (Numerology)


 

... சென்ற பகுதியின் தொடர்ச்சி...

(...இந்த இரண்டு முறைகளையும்... 'ஜோதிடக் கலையின்' ஆதாரமான 'ஜாதகங்களின்' வழி காட்டுதலுடன் கையாண்டு, நமது பெயர்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு... அதன் வழியே வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்...)

1. நியூமராலஜி என்ற எண் கணித முறையிலான மாற்றம் :

இந்த எண் கணித முறை, மேலை நாட்டு மொழியான 'ஆங்கில எழுத்துக்களை' மூலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும், 1 முதல் 8 வரையிலின எண்களின் வரிசைக்குள் கொண்டு வந்து, A, I, J, Q, Y -1... B, K, R - 2... C, G, L, S - 3... T, D, M - 4... E, H, N, X - 5... U, V, W - 6... O, Z - 7... F, P - 8... பெயரின் ஆங்கில எழுத்துக்களின் மதிப்புகளைக் கூட்டி வரும் எண்களுக்கு ஏற்ப பலன்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இதே, எண் கணித முறையை, நமது ஜோதிட அறிஞர்கள், ஜோதிடக் கலையின் வழியாக, கிரகங்களின் வழியே முறைப் படுத்தும் ஆய்வில் ஈடுபட்டு... வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில், தமிழகத்தின் புகழ் பெற்ற எண் கணித நிபுணரான, 'பண்டிட் சேதுராமன்' அவர்களின் ஆய்வுகள்... அவரின் பிரபலமான 'அதிர்ஷ்ட விஞானம்' என்ற புத்தகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜோதிடக் கலைக்கு ஏற்ப, இந்த எண் கணித முறையை முறைப்படுத்தி...1 முதல் 8 வரையிலான எண்களை...

சூரிய பகவான் - 1, சந்திர பகவான் - 2, குரு பகவான் - 3, ராகு பகவான் - 4, புத பகவான் - 5, சுக்கிர பகவான் - 6, கேது பகவான் - 7, சனி பகவான் - 8, செவ்வாய் பகவான் - 9

... என வகைப்படுத்தி, பெயர்களின் ஆங்கில எழுத்துக்களின் கூட்டுத் தொகையுடன்... முறையாக அமைத்துக் கொள்வதற்கு, இந்தக் கலையை பயன்படுமாறு வைத்திருக்கிறார்.

இதில், அடியேன் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி பயன் படுத்தி வருகிறேன். அது, கிரகங்களின் எண்கள்... பெயர்களின் கூட்டு எண்கள்... இவற்றுடன், அவரவர் ஜாதகங்களின் 'யோகாதிபதிகளான' கிரகங்களுக்கான எண்களையும்... சேர்த்து, பெயரமைக்கும் முறையைக் கையாண்டு, வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

உதாரணமாக, 

'R. THILAKA' - 2 + 4 + 5 + 1 + 3 + 1 + 2 + 1 = 19 = 1 ( சூரிய பகவான் ) என்ற பெண்ணின் பருவ கால வாழ்க்கை, கல்லூரி படிப்பு சேரும் வரை கடந்து போய்க் கொண்டே இருந்தது. இது, அந்தப் பெண்ணின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி...மேல் நிலைக் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல்... மன நிம்மதியற்று தவித்து வந்தார்.

 அவரின் குடும்பத்தினர், மருத்துவம், ஜோதிடம், வழிபாடுகள், என அனைத்து முறைகளையும் கையாண்டு தீர்வு வராத சூழலில்... ஜாதகத்தை ஆய்ந்து, தசா புத்தி அந்தரங்களுக்கு ஏற்ப, 'கடக லக்னத்திற்கு' மாராகதிபதியான  'சூரிய பகவானின்' ஆதிக்கத்திலிருந்து விடுவித்து... 'யோகாதிபதியான', 'செவ்வாய் பகவானின்' ஆதிக்க எண்ணான 9 க்கு, ஒரு சிறு திருத்தத்துடன்,  பரீட்சார்த்தமாக மாற்றியமைத்தோம்.

R. THILAKAVATHY - 2 + 4 + 5 + 1 + 3 + 1 + 2 + 1 + 6 + 1 + 4 + 5 + 1 = 36 = 9 ( செவ்வாய் பகவான் ) 

இந்த சிறிய மாறுதல், அவரின் வாழ்வில் மன நிம்மதியையும்... சந்தோஷத்தையும்... மீட்டெடுத்தது. கல்லுரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, திருமண வாழ்வும் அமைந்து, குழந்தை பாக்கியங்களுடன் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறார்.

எண் கணித முறையிலான மாற்றம் மட்டுமே, இதை நிகழ்த்தி விடவில்லை. ஜோதிட ரீதியான அணுகுமுறையே, இதற்கு பேருதவி புரிந்திருக்கிறது. 

இறைவனின் அனுக்கிரகமும்...நமது ;பக்தியும்... நம்பிக்கையும்... இந்த 'எண் கணிதம்' என்ற Numerology என்ற கலையையும், தேவையான போது, பயன்படுத்தும் உள்ளுணர்வைத் தூண்டும்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...