'ஜோதிட விதிகளை' வகுத்தளிக்கும் ரிஷிகள், 'கிரகங்களின் சேர்க்கைக்கு' மிகவும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறார்கள். கிரகங்களின் சேர்க்கைதான், 'யோகங்களுக்கு' வித்திடுகிறது.
ஒரு ஜீவனின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களை, இந்த 'கிரக சேர்க்கைகள்' துல்லியமாக வெளிப்படுத்திவிடும். ஆகையால்தான், கிரக சேர்க்கைகளை மூலமாகக் கொண்டு, எண்ணற்ற யோகங்களை வகுத்தளித்திருக்கிறது 'ஜோதிடக் கலை'.
'சூரிய - புத பகவான்கள்' இணைந்த 'நிபுண யோகம்'... 'சந்திர - செவ்வாய் பகவான்கள்' இணைந்த, 'சந்திர மங்கள யோகம்'... 'சந்திர - குரு பகவான்கள்' இணைந்த, 'குரு சந்திர யோகம்'... 'செவ்வாய் - குரு பகவான்கள்' இணைந்த, 'குரு மங்கள யோகம்'... என, வாழ்வின் சுப மாற்றங்களைக் குறிக்கும் எண்ணற்ற யோகங்களை வகுத்தளித்திருக்கும் ரிஷிகள்...
வாழ்வில், எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும், கிரக சேர்க்கைகளையும் எண்ணற்ற யோகங்களாக வகுத்தளித்திருக்கிறார்கள். உதரணமாக... 'குரு - ராகு பகவான்கள்' இணைவு... 'சந்திர - சனி பகவான்களின்' இணைவு... 'சூரிய - சந்திர பகவான்களின்' இணைவு... 'சூரிய - சனி பகவான்களின்' இணைவு... 'செவ்வாய் - சனி பகவான்களின்' இணைவு... 'சந்திர - ராகு பகவான்களின்' இணைவு... 'சந்திர - கேது பகவான்களின் இணைவு... 'சூரிய - ராகு பகவான்களின்' இணைவு... 'சூரிய - கேது பகவான்களின்' இணைவு... 'சனி - கேது பகவான்களின்' இணைவு... 'சனி - ராகு பகவான்களின்' இணைவுகள்.
இந்த இணைவுகள் ஒவ்வொன்றிற்கும், ஒரு 'பொதுவான பலனை' அளிக்கும் ரிஷிகள்... முடிவில் ஒரு 'சூட்சுமத்தை' வைக்கிறார்கள்... அது, 'இந்த இணைவுகள் அமைந்திருக்கும் இடத்தை வைத்து பலனை சொல்வாய்...!' என்பதுதான்.
'சனி - கேது பகவான்களின்' இணைவு, பொதுவாக... 'துறவு மனப்பான்மையையும்... விரக்தியையும்... தடைகளையும்... முட்டுக்கட்டைகளையும்...' வெளிப்படுத்தும், என்பதாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், 'இந்த இணைவு அமையும் இடத்தை' வைத்து பலனளிக்கும் போது... பலன்களின் தன்மையே, மாறி விடுவதை அனுபவத்தில்தான் உணர்ந்து கொள்ள முடியும்.
உதாரணமாக... மேஷ லக்னத்திற்கு, 10 ஆம் பாவத்தில், அமையும் 'சனி - கேது பகவான்கள்'.. அவர்களின் 'தசா - புத்திக் காலங்கள்'... கல்வி பயிலும் நேரத்திலோ, அல்லது தொழில் அமையும் நேரத்திலோ, தடைகளை ஏற்படுத்தி... வாழ்வின் பாதையையே மாற்றி விடும்... அபாயம் உண்டு.
அதுவே, ரிஷப லக்னமாக அமையும் போது, 10 ஆம் பாவத்தில் அமையும் 'சனி - கேது பகவான்களின்' இணைவு... அவர்களின் தசா - புத்திக் காலங்கள்... கல்வி பயிலும் நேரத்தில் அமையும் போது, 'மருத்துவத் துறையின்' ஏதாவது ஒரு பிரிவில், கல்வி பயிலும் சூழலையும்... தொழில் அமையும் நேரத்தில், மருத்துவம் சார்ந்த ஏதாவது ஒரு பிரிவில் பணியோ அல்லது தொழிலோ அமையும் வாய்ப்பையோ உருவாக்கும்.
இவ்வாறாகத்தான், ஒவ்வொரு இணைவும்... அவை, அமையும் 'ஆதிபத்தியங்களுக்கு' ஏற்ப, 'வெவ்வேறு மாறுபட்ட பலன்களை' அளித்து விடுகின்றன. இந்த 'ஆதிபத்தியங்களின்' அமைவைத் தீர்மானிப்பது... ஒவ்வொரு ஜீவனின் 'பூர்வ பாப - புண்ணியங்கள்' என்ற 'கர்ம வினைகள்தான்'. இந்த 'கர்ம வினைகள்' என்ற 'சூட்சும வலைப் பின்னல்தான்', கிரகங்களின் சேர்க்கைகள் மூலம்... ஜீவனின் 'பாப - புண்ணிய விளைவுகளை' வெளிப்படுத்துகின்றன.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment