நான்காவது படிநிலையான 'பிரணாயாமம்' என்ற நிலையைக் கடப்பதற்கு, ஒரு குருவின் துணை அவசியமாகிறது. ஏனெனில், பிரணாயாமம் என்பது, ஜீவனின், ஜீவ சக்தியான வாயுவை, ஒழுங்கு படுத்துதல் அல்லது நேராக்குதல் என்பதாகும். (பிராணன் - வாயு... ஆயமம் - நேராக்குதல்)
இது, மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. அதன் நீட்சியாகும். மூச்சுப் பயிற்சி என்பது, நுரையீரலில் முழுமையாக காற்றை நிரப்புவதும்... பின் அதனின்று காற்றை வெளிவிடுவதுமான... சீரான பயிற்சி முறை. இந்தப் பயிற்சி, நுரையீரலிலிருந்து வெளிப்படும் காற்று தொண்டை வழியாக, மூக்கின் துவாரங்கள் வழியாகவும்... வாய் வழியாகவும்... சிரமமின்றி, உள் வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் பயிற்சி முறையாகும்.
ஆனால், பிரணாயாமம் என்பது,உள் வெளி சுவாசத்தை மாற்றி... அதை பிரம்மாந்திரம் என்ற சிரசின் உச்சிப் பகுதியை நோக்கி... செலுத்தும் பயிற்சி முறையாகும். அதனால்தான், இதை பயில, முறையான யுக்தியுடன் கூடிய பயிற்சி முறை தேவைப்படுகிறது. அதற்கு, இந்தப் பயிற்சி முறையை நன்கு அனுபவித்து அறிந்தவரின் துணையைக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு, நன்கு அனுபவித்து அறிந்த ஒரு குருவின் 'தீட்சை' என்ற வழிகாட்டுதலின் வழியாகத்தான், இந்த நான்காவது படி நிலையைக் கடக்க முடியும். இந்தப் படி நிலையை முறையாகப் பயின்றால்தான்... தொடரும் நான்கு படி நிலைகளையும் கடந்து, அட்டாங்க யோகத்தை பூர்த்தி செய்யலாம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment