உடல் சார்ந்த உலகியல் வாழ்வில் மூழ்கியிருந்த ஜீவன்,,, 'இயமம்' என்ற பக்தியின் வழியாக, ஒழுங்கு முறையிலான 'நியமமான' வாழ்வியல் படி, 'உள் வாழ்வு' என்ற 'ஆத்ம நிலை ஒன்றுதலுக்குத்' தகுதி பெறுகிறது.
இந்தப் படி நிலை மாற்றங்கள் ஜீவனை, 'ஒரு சுகமான இருப்பு நிலை' என்ற 'ஆசன முறைக்கு' தயார் படுத்துகிறது. 'தவம்' என்ற உள் நிலைப் பயணத்தில் பங்கு பெறும் ஜீவன், தனது உடலை முறையாகத் தயார் செய்து கொள்வது அவசியம்.
ஒவ்வொரு நொடியும், மாற்றமடைந்து கொண்டு இருப்பதும்... அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்குபதுமான... இந்த உடலில்தான், என்றும் அழிவில்லாத 'ஆத்மா' என்ற 'பரம் பொருள்' உறைந்திருக்கிறது. ஆகவே, இந்த உடலை சரியான முறையில் பேணிக் காப்பது அவசியமாகிறது.
எவ்வாறு ஒரு பயணத்திற்கு முன்பாக, நாம் பயணிக்க்கும் வாகனத்தை, முறையாகப் பேணிப் பாதுகாக்கிறாமோ... அது போல, நமது இலக்கான, 'இறைவனின் திருவடியை' அடைவதற்கு ஆதாரமாக இருக்கும் இந்த உடலையும் முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதிகமாகப் போஷிப்பதும் கூடாது... கவனக் குறைவாக இருப்பதும் கூடாது.
நமது வயதிற்கு ஏற்பவும்... நமது உடல் நிலைக்கு ஏற்பவும்... ஒரு 'ஆசன முறையைத்' தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் முறை. எல்லோரும் இயல்பாக அமரும் 'சுகாசனம்'... சற்று பயிற்சிக்குப் பின் அமரும் 'அர்த்த பத்மாசனம்'... முழு முழுமையான 'பத்மாசனம்'... என்று, எந்த ஆசன முறை நமக்கு இயல்பாகிறதோ... அந்த ஆசன முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, பக்தி என்ற 'இயமமும்'... ஒழுங்கு முறை என்ற 'நியமமும்'... இறைவனை நோக்கிய தியானத்திற்கான 'ஆசனமும்'... அட்டாங்க யோகத்தின், முதல் மூன்று படி நிலைகளைப் பூரணமாக்குகின்றது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment