Tuesday, January 26, 2021

அட்டாங்க யோகம் : 'நியமம்'


உடல் சார்ந்த 'உலக வாழ்வில்' மூழ்கிக் கிடக்கும் ஜீவன்.. 'இயமம்' என்ற பக்தியின் வழியாக... ஆத்மாவில் ஒன்றிவிடும் பாதையில் பயணிக்கும் போது, 'நியமம்' என்ற ஒழுங்கு முறையிலான வாழ்க்கை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

பக்தியில்லாத, ஒழுங்கு முறையான வாழ்வு, பூரணமான வாழ்வாக அமையாது. ஒழுக்கம் என்பது உடல் மட்டும் சார்ந்தது அல்ல... உள் வாழ்வும் சார்ந்ததுதான். உள்ளும்... புறமும்... ஒரே நிலையில் இருக்கும் தன்மையே... ஒழுக்கத்தின் அளவு கோளாகும்.

முதலில் கவனத்துடன் கூடிய எண்ணமும்... அந்த எண்ணத்திற்கு ஏற்ப வெளிப்படும் சொற்களும்தான்... இறுதியில், ஒரு நிறைவான செயலாக மாறுகிறது. இவ்வாறு, எண்ணம்... சொல்... செயல்... என்ற மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும் போது, உள்ளும்... புறமும்... ஒரே நிலையில் இருக்கும் தன்மையை ஜீவன் பெறுகிறது.

இயமம் என்ற பக்தியில் மூழ்கிய ஜீவன், நியமம் என்ற ஒழுங்கு முறையான வாழ்வில் பயணிக்க ஆரம்பிக்கும் போது, அட்டாங்க யோகத்தின் இரண்டாவது படி நிலை பூர்த்தியாகிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...