மூழ்கித் தவிக்கும் எனக்கு - உன்
மூச்சுக் காற்றைத் தந்து விடு !
இருளில் தவிக்கும் எனக்கு - உன்
ஒளியின் கீற்றைத் தந்து விடு !
அனலில் தவிக்கும் எனக்கு - உன்
நிழலின் குளுமை தந்து விடு !
வழியை தொலைத்த எனக்கு - உன்
வழியைக் காட்டித் தந்து விடு !
உன்னைத் தொலைத்து எனக்கு - உனைச்
சேரும் ஞானம் தந்து விடு !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment