Thursday, January 21, 2021

கவிதைத் தொகுப்பு - 'இறைவா அருள்வாய்...!'


மூழ்கித் தவிக்கும் எனக்கு - உன்

மூச்சுக் காற்றைத் தந்து விடு !


இருளில் தவிக்கும் எனக்கு - உன்

ஒளியின் கீற்றைத் தந்து விடு !


அனலில் தவிக்கும் எனக்கு - உன்

நிழலின் குளுமை தந்து விடு !


வழியை தொலைத்த எனக்கு - உன்

வழியைக் காட்டித் தந்து விடு !


உன்னைத் தொலைத்து எனக்கு - உனைச்

சேரும் ஞானம் தந்து விடு !


ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...