Thursday, January 21, 2021

கவிதைத் தொகுப்பு - 'மந்திரத்தில் விளைந்த மாங்காய்'





 

கடுகளவு விதைக்குள்ளே

விரிந்து நிற்கும் விருட்சம் வைத்தான்...


கையளவு ஊற்றுக்குள்ளே

கடல் கலக்கும் வெள்ளம் வைத்தான்...


கண் காணா அணுகளுக்குள்ளே

புயலை யொத்த காற்றை வைத்தான்...


மிகச் சிறிய அரணிக்குள்ளே

வனம் எரிக்கும் அன

லை வைத்தான்...


சிறிய கரு முட்டைக்குள்ளே

சிந்தனை விரியும் மானுடம் வைத்தான்...


சிறியதற்குள் பெரிதை வைப்பதும்,

பெரியதற்குள் சிறிதை வைப்பதும்,

மந்திரத்தால் மாங்காய் விளைவிக்கும் 

மாய விளையாட்டன்றி வேறென்ன... !


ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...