Saturday, January 23, 2021

'இரசவாதம்', உணர்த்தும் சூட்சும இரகசியம்...


இரசவாதம் :

'மிகவும் கீழான உலோகமாகக் கருதப்படும் இரும்பை, மிக உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் முறை.'

இரும்பைப் பொன்னாக்கும் வித்தையையும்... சித்த மகா புருஷர்களையும்... இணைத்துப் பார்க்கும் வழக்கம், எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், சித்த மகா புருஷர்கள், 'சித்தம்' என்ற எண்ணங்கள் தோன்றும் மூலத்திலேயே ஒன்றியவர்கள். சித்தத்தை சுத்தமாக்கி.. அந்த மூலத்திலேயே நிலைத்து நின்றதால்தான்... 'சித்த புருஷர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து...'இரும்பைப் பொன்னாக்கும் வித்தை எங்களிடம் இருக்கிறது...' என்ற வாசகம் பொய்யாகுமா...!

அவர்கள், இரும்பு என்ற உலோகத்தை... பொன் என்ற உலோகமாக... மாற்றுவதைக் குறிப்பிடவில்லை.வெகு சீக்கிரமாகவே துருப்பிடித்து உதிர்ந்து போகக் கூடிய ஒரு உலோகம்... நிலைத்து நிற்கக் கூடிய ஒரு உலோகமாக மாற்றம் நடைபெற வாய்ப்பில்லை... என்பதை அறியாதவர்களா ? அவர்கள். அவர்கள் குறிப்பிட்டது, மாற்றமடைந்தே கொண்டிருக்கும் இந்த 'உடலையும்'... என்றும் மாற்றமடையாமல் இருக்கும் 'ஆத்மாவையும்'தான். 

இந்த உடல் ஜனனத்திலிருந்து ஒவ்வொரு நொடியும் மறைவை நோக்கிய பயணத்தில்தான் பயணிக்கிறது. ஆனால், அந்த உடலுக்கும், உடலுக்குக் காரணமான ஜீவனுக்கும்... என்றும் உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கிற 'ஆத்மா' என்றும் மாறாது இருக்கின்றது.

இவ்வாறு, 'அழிந்து போகும் உடலுக்கும்'... 'அழிவில்லாத ஆத்மாவிற்கும்'... இடையிலிருக்கும் ஜீவனுக்கான, அனுபவ உரையாகத்தான்... இதை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஜீவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்கள்... சித்த புருஷர்கள். அது, அழிந்து கொண்டிருக்கும் இரும்பைப் போன்ற உடலுக்கு இடம் கொடுப்பதா...? அல்லது, என்றும் நிலைத்து நிற்கும் ஆத்மாவுக்கு இடம் கொடுப்பதா... ? என்பதுதான்.

உடலுக்கு இடம் கொடுக்கும் போது, மீண்டும் பிறப்பு என்ற நிலையாமைக்கும்... ஆத்மாவுக்கு இடம் கொடுக்கும் போது, பிறப்பற்ற நிலைத்தலையும்... நோக்கி ஜீவன் பயணிக்கிறது. இந்த 'இரசவாதத்தைத்தான்', சித்தர்கள் அருளியிருக்கிறார்கள்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...