Wednesday, January 20, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 149. 'கர்ம வினைகளை உறுதிப்படுத்தும் ஜோதிடக் கலை'


 84 லட்த்திற்கும் மேலான உயிரினங்களைக் கொண்டதாக, இந்த பூமி இருக்கிறது, என்பதை வேதம் உறுதி செய்கிறது.

இவ்வளவு மாறுபட்ட உயிரினங்களுக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதற்கு. 'நமது வேதங்கள்' மட்டுமே தெளிவான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறது. பிறவிகளுக்குள்ளேயான மாறுபாடுகளுக்கு, அவற்றின் 'கர்ம வினைகளே' காரணம் என்பதை... அதன் அங்கமான 'ஜோதிடக் கலையின்' வாயிலாக, நிரூபணமும் செய்திருக்கிறது.

உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகளெல்லாம், 'தொடர் பிறவிகள்' என்ற இந்தியர்களின் மெய்ஞானத்தை நேரடியாக ஒப்புக் கொள்ளாத போதிலும்... நமது புரதான மெய்ஞானத்தின் தீர்வுகளை.. நடைமுறையில் அனுபவித்து அறிந்து கொண்டுதான் இருக்கின்றன.

நமது வேதம், படைப்பவரான பரப் பிரம்மம்... ஒவ்வொரு ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, அதற்கு ஒரு பிறப்பை அளிக்கிறார் என்பதையும்... அதனதன் 'கர்ம வினைகளுக்கு' ஏற்பவே, ஜீவர்கள் ஒவ்வொருவரும் பிறப்பையும்... வாழ்வையும் அனுபவிக்கிறார்கள்... என்பதையும் நடைமுறையில் உறுதிப் படுத்துகிறது.

அதற்குச் சாட்சிதான்... உயிரினங்களுக்கு இடையேயும். உயிரினங்களுக்கு உள்ளேயும்... எண்ணற்ற வித்தியாசங்கள் இருப்பது. எந்த ஒரு உயிரினமும் ஒன்றுக் கொன்று மாறுபட்டிருப்பது மட்டுமல்ல... ஒன்றுக்குள்ளேயே மாறுபட்ட வாழ்வை வாழ்கிறது.

உதாரணமாக ஒரு சிறிய உருவமான 'எறும்பு' முதல், பெரிய உயிரினமான 'யானை' வரை... மனிதன் உட்பட, எந்த உயிரினமும், அவைகளுக்கு இடையேயும்... அவர்களுக்கு உள்ளேயும்... ஒரே மாதிரியான வாழ்வை மேற்கொள்வதில்லை.

பகுத்து அறியும் பண்பைக் கொண்டுள்ள மனிதன் உருவாக்கும் எந்த ஒரு உருவாக்கமும் கூட ஒரே மாதிரியாக இருப்பதில்லை . உதாரணமாக, ஒரே மாதிரியான இரண்டு தோசைகளை வார்க்க முடிவதில்லை. 

அப்படியே உருவாக்கங்களை உருவாக்கினாலும், அவற்றின் பயன்கள் ஒரே மாதிரியாக அமைவதுவும் இல்லை. உதாரணமாக, ஒரே மாதிரியாக உருவாக்கப்படும் இரண்டு அரைவை இயந்திரங்கள்... அவற்றின் பயன்பாட்டின் போது, மாறுபட்ட நிலைகளை அடைந்து விடுகின்றன.

இவையெல்லாம் உறுதிப்படுத்துவது, ஒன்றைத்தான்... அதுதான் 'கர்ம வினைகள்' என்ற 'பூர்வ வாசனைகளுக்குள்',  ஜீவர்கள் மட்டுமல்ல... அவர்கள் மூலமாக உருவாக்க்கப்படும் உருவாக்கங்களும்... கட்டுப்பட்டுப் போகின்றன.

இதைத்தான், 'ஜோதிடக் கலை', 'கர்ம வினைகள்' என்றும்... அதனால் விளையும் 'தொடர் பிறவிகள்' என்றும்... வரையறுத்து, அதனை '9 கிரகங்களின் தசாக் காலங்களின்' வழியே... 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு' என்று 'ஜனன கால ஜாதகத்தில்' குறிப்பிடுகிறத.

புறப்படும் இடத்தில் ஒன்றாக ஆரம்பிக்கும் ஓட்டப் பந்தயம்... இறுதியில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம்... என்ற வகையில்தான் முடிவடைகிறது. அது போலத்தான், ஒரே மாதிரியாக பிறப்பெடுக்கும் ஜீவனின் வாழ்வும் ஒன்றுக் கொன்று மாறுபட்டு அமைந்து விடுகிறது.

இந்தக் 'கர்ம வினைகளின்' சூட்சுமத்தை, 'ஜோதிடக் கலை' ஒன்றே நிரூபணம் செய்கிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...