நமது வீட்டுக்கு வெளியே, மின் கம்பத்தில் மின்னோட்டம் இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் மின்னோட்டம், மிக சக்தி வாய்ந்தது. நாம் இருக்கும் இடம் முழுவதையுமே ஒரே கணத்தில் பகலாக மாற்றக் கூடிய வல்லமை மிக்கது. ஆயிரக்கணக்கான வோல்ட் அளவுள்ள மிக சக்தி வாய்ந்த அந்த மின்னோட்டத்தைப் போன்றதுதான்... இறை சக்தி.
அந்த மின்கம்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது, அதைப் பூஜிப்பதாலோ... நமது வீட்டில் மின்னொளி வந்து விடுவதில்லை. நமக்கு மின்னொளி வேண்டுமெனில்... முதலில் நாம் ஒரு மின் இணைப்பைப் பெற வேண்டும். அந்த இணைப்பைப் போன்றதுதான்... ஒரு சத்குருவின் தொடர்பு.
அந்த தொடர்புதான், மிக சக்தி வாய்ந்த ஆயிரக் கணக்கான வோல்ட்டுகளைக் கொண்ட 'இறை சக்தியை', நாம் அனுபவிக்கக் கூடிய அளவிலான 240 வோல்ட்டுக்களை, நாம் அன்றடம் அனுபவிக்கும், மின் விளக்குகளாக... மின் விசிறிகளாக.. எண்ணற்ற மின் சாதனங்களை இயக்கக் கூடிய, மிக நுட்பமான சக்தியுள்ள 'வாட்ஸ்' களாக... மாற்றி விடுகிறது.
இதுதான், குருவருள் செய்யும் அற்புதம்.
ஸாய்ராம்

No comments:
Post a Comment