இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது...
அங்கிருந்து ஆட்டுகின்றவன்...
தினம் ஆடுகின்ற நாடகம் இது...'
ஒரு மனிதனின் முப்பரிமாண முன்னேற்றத்தை, இந்த அற்புதமான வரிகளுக்குள் கவிஞர் கொண்டு வந்திருப்பார்.
கதாநயகன் ஒரு சுதந்திரப் பறவை. பெரிய செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன். தனது இளமைக் காலம் முழுவதையும், பெரும் பொழுது போக்குகளுக்குள் கழித்தவன். அவ்வாறே, தனது வாழ்நாள் முழுவதையுமே கடந்து போக வேண்டும்... என்று நினைத்து வாழ்பவன்.
அவன் வாழ்வில், ஒரு பெண் வந்து சேர்கிறாள். அவனது வாழ்க்கை முறைகள் அனைத்தையுமே மாற்றி அமைக்கிறாள். முழுவதுமாக மாற்றமடைந்த நாயகன், தனது வாழ் நாள் முழுவதையுமே, அந்தப் பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான். அந்தப் பெண்ணும் உடன் படுகிறாள்.
ஆனால் விதி வசமாக, அவர்களின் கனவுகள் தகர்க்கப் படுகிறது. தான் விரும்பிய துணையை அடைய முடியாமல்... அவளுக்காகவே தான் எழுப்பியிருக்கும் அந்தக் கனவு மாளிகையில்... விஷம் அருந்தி, தனது வாழ்வை முடித்துக் கொள்கிறான்.
அப்போது, அவன் பாடும் பாடலில் வரும் வரிகள்தான் இவை. நாயகன் கேட்கும் கேள்விகளும்... அதற்கான பதிலை தானே உணர்ந்து கொள்வதுமாக... என்ன அற்புதமான 'சூழ் நிலைப் பாடல்' இது ... !
கேள்விகள் :
* இந்தப் பெண்ணுடனான உறவு, எனக்கு எங்கிருந்து வந்தது... ?
* இன்று, இந்த நஞ்சு உண்ணும் நிலையும் எங்கிருந்து வந்தது... ?
இதற்கான பதில் :
* ஆம், எனது 'கர்ம வினைகளின் படி' எனக்கு என்ன நடக்க வேண்டுமோ... அதுதான் நடக்கிறது. அதை மேற்பார்வை செய்பவனான இறைவன்தான் இதையெல்லாம் ஆட்டுவிக்கும் சூத்திரதாரியாக இருக்கிறார்.
இது போன்ற 'சூழ் நிலைப் பாடல்கள் (Situation Song)' எழுதுவதில், கவிஞருக்கு இணை கவிஞர்தான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment