Friday, December 4, 2020

'கர்ம வினைகள் களைந்து போகும் மாயம்'

                                                                



ஜீவ வாழ்வின் மூலமாக இருப்பது, அதன் 'கர்ம வினைகளே'. அந்தக் 'கர்ம வினைகளின்', பாப மற்றும் புண்ணிய விளைவுகளைச் சுமந்து கொண்டுதான், ஜீவன் ஒரு பிறவியை அடைகிறது.

தனது வாழ் நாட்கள் முழுவதும், இந்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப, தனது செயல்களால், துன்பங்களையும், இன்பங்களையும் மாறி, மாறி அனுபவிக்கும் ஜீவன், இறுதியில் இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகள்' அனைத்தும் பூரணமான பின்... இந்தப் பிறவியில் தான் சேர்த்த 'கர்ம வினைகளையும்' சேர்த்துக் கொண்டு.. அடுத்தப்   பிறவியை நோக்கி நகர்கிறது.

இவ்வாறு, தொடர்ந்து பிறவிகளையே அனுபவித்துக் கொண்டு அல்லலுறும் ஜீவன், எப்போதோ ஒரு பிறவியில்... தனது புண்ணிய பலன்களின் பூரணத்துவத்தால், தனது 'கர்ம வினைகளின்' மொத்தத்தையும் களைந்து விடத் துணிகிறது.

அந்தத் துணிவுதான், ஜீவனை, 'கர்ம யோகத்திலோ'... 'பக்தி யோகத்திலோ'... ஞான யோகத்திலோ'... பயணிக்க வைக்கிறது.

இதில், எந்தப் பாதையை, ஜீவன் தேர்ந்தெடுத்தாலும்... அது, அந்த ஜீவனை, அதன் 'கர்ம வினைக்' கட்டுகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கும் வகையில் பயணிக்க வைக்கிறது.

ஒவ்வொரு பாதையும், மிகவும் கடினமானது என்பதில். சந்தேகமே இல்லை. ஆனால், அதில் பயணிக்கும் வல்லமை ஜீவனுக்கு இருக்கிறது. தான் தேர்ந்தெடுக்கும் பாதையோ... அல்லது தனக்கு அமையும் பாதையோ... அதில் இடைவிடாது பயணிப்பதே.... ஜீவனின் கடமை, இதுதான் கர்ம வினைகள் களைந்து போவதின் மாயம்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...