Thursday, December 24, 2020

'சனி பகவான்' பெயர்ச்சி - 2020.

    


    
    

27.12.2020, மார்கழி மாதம் 12 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அதிகாலை 5.25 மணியளவில்...'விருச்சிக லக்னத்தில்'... உத்திராட நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில்... தனுர் லக்னத்திலிருந்து... மகர லக்னத்திற்கு, 'சனி பகவான் 'பெயர்ச்சி அடைகிறார்.

1. சனி பகவான், தைர்ய ஸ்தானாதிபதியாகி, இராசியிலும்... நவாம்ஸத்திலும்... 'வர்க்கோத்துமம்' பெற்று வலுத்திருக்கிறார்.

2.  நீசம் பெற்றுள்ள 'தன - பஞ்சமாதிபதியாகிய', 'குரு பகவானுக்கு...' தனது அதீத பலத்தால்... 'நீச பங்கம்' என்ற யோகத்தை அளித்து... குரு பகவானுக்கு வலிமை சேர்க்கிறார்.

3. குரு பகவானின் வீடாகிய... தன பாவத்தில் இருக்கும் 'ஜீவன - லாபாதிபதிகளான'... 'சூரிய பகவானுக்கும், புத பகவானுக்கும்... ஸ்தான பலத்தை அளிக்கிறார்.

4. தான், 'தன - பூர்வ புண்ணியாதிபதியான', 'குரு பகவானுடன்' இணைந்து, பூர்வ புண்ணிய ஸ்தானத்தைத் தனது 3 ஆம் பார்வையால் பார்த்து அருள்கிறார்.

5. தனது 7 ஆம் பார்வையால் 'பாக்கிய ஸ்தானத்தையும்'... 10 ஆம் பார்வையால் 'சுக - சயன ஸ்தானத்தையும்' பார்த்து அருள்கிறார்.

6. தன்னோடு இணைந்திருக்கும்  'குரு பகவானின்' 5 ஆம் பார்வையால், பாக்கியாதிபதியாகிய 'சந்திர பகவானையும்'... தனது 7 ஆம் பார்வையால் 'பாக்கிய ஸ்தானத்தையும்' பார்வை செய்கிறார்.

7. லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்', 6 ஆம் இடத்தில், வலுத்திருக்கிறார். லக்னத்திலேயே, 7 ஆம் ஸ்தானாதிபதியாகிய 'சுக்கிர பகவானை' அமர்த்தி... தனது 4 ஆம் பார்வையால், 'பாக்கிய ஸ்தானத்தையும்'... 7 ஆம் பார்வையால் 'சுக - சயன ஸ்தானத்தையும்'... 8 ஆம் பார்வையால், 'லகனத்தையும்'... பார்வை செய்கிறார்.

8. கார்த்திகை நட்சத்திரத்தில் இந்தப் பெயர்ச்சி நிகழ்ந்து... 'சூரிய பகவானின்' 6 வருட தசாவில்... தற்போது எஞ்சியிருக்கும் காலம்... 2 வருடம், 1 மாதம், 2 நாளை கடந்து கொண்டிருக்கிறது.

9. ஜீவனாதிபதியாகிய 'சூரிய பகவான்' தன பாவத்தில்... லாபாதிபதியாகிய 'புத பகவானோடு' இணைந்தது மட்டுமல்ல... தனது 'நட்சத்திர சாரத்தால்'... 'சனி பகவானையும்', 'குரு பகவானையும்' இயக்கிக் கொண்டும் இருக்கிறார்.

... இந்த அம்சங்கள் அளிக்கும் பலன்கள் :

 17.10.2020 லிருந்து 29.1.2023 வரையிலான காலம்...

* கடந்த ஒரு வருடமாக நிலவி வந்த பொருளாதர நெருக்கடிகளை... இனி எதிர்கொள்ளும் தொழில் முயற்சிகளாலும், அதிலிருந்து பெறும் லாபத்தைக் கொண்டும்... கடந்து போக முடியும்.

* தற்போது எதிர்கொள்ள வேண்டிய சூழல் மிகக் கடுமையான சவால்கள் நிறைந்த காலம்தான்... ஆனால் அதை எதிர் கொள்ளும் தைர்யமும், போராடி இறுதியில் வெற்றி பெறும் சூழலும்.. அமையும்.

* ஒவ்வொருவரும்... அவரவர்களுக்கான கடமைகள் அனைத்தையும்... அவரவர்களின் சூழ்நிலைகளுக்கு  ஏற்ப... பூர்த்தி செய்வர்.

* தன்னோடு இணைந்து, வாழ்வில் பயணிக்கும் நபர்களினால் அழுத்தங்களும்... நெருக்கடிகளும்... கூடினாலும், அதைப் பொறுமையாகவும்... திறமையாகவும்... கையாண்டு, தமது அனைத்துக் கடமைகளையும் பூர்த்தி செய்யும் வல்லமை கூடும்.

* 17.10.2020 முதல் 23.9.2021 வரை பொருளாதர முன்னேற்றமும்...

* 23.9.2021 முதல் 29.1.2022 வரை சற்று மன அழுத்தங்களும்...

* 29.1.2022 முதல் 29.1.2023 வரை அழுத்தங்களில் இருந்து மீண்டு... அனைவரின் ஒத்துழைப்பையும் பெறும் காலமாகவும்...

* 29.1.2023 க்கு மேல்... மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி... மன நிம்மதியான வாழ்வும் அமையும்.

''சங்கடம் தீர்க்கும் சனி பகவானே ! 

மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாய் !

சச்சரவின்றிச் சாகா நெறியில்...

இச்சகம் வாழ இன்னருள் தருவாய் !'

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...