Saturday, December 26, 2020

'ஆத்ம விசாரணை' - பகவான் ரமண மகிரிஷி

           

இறைவனால் ஆட்கொளப்படுதல்... என்ற நிலைதான், ஆத்ம விசாரணையின் இறுதியில் நிகழும் அற்புதம் !

சீர்காழியில் பிறந்த சின்னக் குழந்தையான 'சம்பந்தனை' தனது அருள் கருணையினால்... தாயாரின் மூலமாக ஆட்கொண்டு... 'ஞான சம்பந்தனாக' மாற்றியருளினார்... சர்வேஸ்வரன்.

அதே அற்புதம்தான்... இளம் பிராயத்தினரான 'வேங்கடராமனின்' வாழ்விலும் நிகழ்ந்தது. திருவண்ணாமலையில் உறையும் 'அண்ணாமலையாரே', இந்த சிறுவனின் மனதில் எழுந்திருந்து, உலக வாழ்வின் சூழலிலிருந்து மீட்டு, அகத்துள் 'ஆத்ம அனுபவத்தைக்' கொடுத்தது மட்டுமல்ல... தனது வடிவேயான 'அருணை மலையிலேயே' அணைத்தும் கொண்டார்.

இந்த அனுபவத்தைத்தான்... தனது 'அருணாசல அக்ஷரமணமாலையில்'...

'அகம் புகுந்து ஈர்த்து உன் அகக் குகை சிறையாய்

அமர்வித்தது என்கொல் அருணாசலா...'

... என்று, தன்னை ஆட்கொண்டதையும்... தனக்குள்ளேயே தன்னை ஈர்த்துக் கொண்டதையும்...அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஸாய்ராம்.



 

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...