Tuesday, October 20, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள் இயற்றிய 'ஸ்ரீ ரமண வழி என்ற சாதனை சாரத்தில்'.. 'எது ஞானம் ? என்ற பகுதி.



'பகவான் ஸ்ரீ ரமண மகிரிஷி' அவர்களின் சிந்தனைத் தொகுப்புகளை... பகவானின் பக்தர்கள் யாவரும் உணர்ந்து கொள்ளும் வகையில், பாக்களாகவும். பதவுரைகளாகவும், 'ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள்', தனது நூலான 'ஸ்ரீ ரமண வழி என்ற சாதனை சாரத்தில்' 86 தலைப்புகளின் கீழ் அளித்திருக்கிறார்.

அதன் 55 ஆவது தலைப்பான... 'எது ஞானம்' என்ற தலைப்பின் 302 ஆவது பாடல்... ஞானத்தைப் பற்றிய 'பகவானின்' அருள் வெளிப்பாட்டை விவரிக்கிறது.

பாடல் :

'தடைபடாக் கையும் தடைபடாப் பேச்சும்

தடைபடா ஆசுகவிச் சாற்றும் - தடைபடா

எண்ணமாம் மாயை ; இருப்பில் தடைபடாத்

திண்ணமே ஞானம் தெரி'

பதவுரை :

தடைபடாமல் எழுதும் வன்மையும், தடையின்றிப் பேசும் வன்மையும், தடைபடாமல் ஆசுகவியாகப் பாடல்களைப் பொழியும் வன்மையும், தடைபடாது பெருகும் எண்ணங்களின் பயனே. ஆகையால், அவை மாயயின் தடைபடாத லீலையேயாகும். அவ்வாறின்றி, தன் இருப்பு நிலையின் ஆத்ம நிஷ்டையில், எண்ணங்களின் எழுச்சியைப் புறம் தள்ளி, தடைபடாது நிற்கும் வன்மையே ஞானமாகும் என்று அறிக.

            

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...