அதன் 55 ஆவது தலைப்பான... 'எது ஞானம்' என்ற தலைப்பின் 302 ஆவது பாடல்... ஞானத்தைப் பற்றிய 'பகவானின்' அருள் வெளிப்பாட்டை விவரிக்கிறது.
பாடல் :
'தடைபடாக் கையும் தடைபடாப் பேச்சும்
தடைபடா ஆசுகவிச் சாற்றும் - தடைபடா
எண்ணமாம் மாயை ; இருப்பில் தடைபடாத்
திண்ணமே ஞானம் தெரி'
பதவுரை :
தடைபடாமல் எழுதும் வன்மையும், தடையின்றிப் பேசும் வன்மையும், தடைபடாமல் ஆசுகவியாகப் பாடல்களைப் பொழியும் வன்மையும், தடைபடாது பெருகும் எண்ணங்களின் பயனே. ஆகையால், அவை மாயயின் தடைபடாத லீலையேயாகும். அவ்வாறின்றி, தன் இருப்பு நிலையின் ஆத்ம நிஷ்டையில், எண்ணங்களின் எழுச்சியைப் புறம் தள்ளி, தடைபடாது நிற்கும் வன்மையே ஞானமாகும் என்று அறிக.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment