Monday, October 5, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும்... பகுதி : 136. ஆத்மகாரகரான சூரிய பகவான்.


பரபிரம்மம் என்ற இறையருள்... ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஆத்மசொரூபமாக எழுந்தருளியிருக்கிறது. அதனால்தான் ஜீவன் தனது ஆயுட்காலம் முழுவதுமாக ஜீவனாக... உயிருடன் உலவுகிறது.

பரபிரம்மமாக இருக்கும் போது குணங்களற்ற... பரி பூரணமாக... சுய ஒளிப் பிரகாசமாக... கோடி சூரியர்களின் ஒளிப்பிளம்பாக... இருக்கும் இறையருள், ஒரு ஜீவனுக்குள் எழுந்தருளும் போது, 'சத்து-சித்து-ஆனந்தம்' என்ற ஆத்ம சொரூபமாக இருக்கின்றது.

இந்த 'சச்சிதானந்தத்தை' மூலமாகக் கொண்டுதான்... ஜீவன் தனது கர்மவினைகளைக் கடந்து போகின்றது. சத்து என்ற சத்தியமான இருப்பையும்... ஆனந்தம் என்ற பூரணத்தையும்... தன்னகத்தே கொண்ட ஆத்மா, சித்தம் என்ற தன்னொளியைத்தான் ஜீவனுக்கு அருள்கிறது.

அந்த சித்தத்தில்தான்... ஜீவன் தனது இருப்பைக் கொண்டிருக்கிறது. அந்த ஜீவன் சுமக்கின்ற 'கர்ம வினைகளால்தான்' இந்த சுய ஒளிப் பிரகாசமான... பரி பூரணமான... பரப்பிரம்மம் பின்னமடைந்து, கோடி சூரியப் பிரகாசமாக இருக்கிற ஆத்மா... ஒற்றைச் சூரியனாக நமக்குள்ளிருந்து ஆகாயத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பின்னமடைந்த... பிரதிபலிக்கிற... 'சூரிய பகவானைத்தான்', ஆத்மகாரகன் என்றழைக்கிறது 'ஜோதிடக் கலை'. ஆதலால்தான், ஜோதிடக் கலையில் ஜீவனின் லக்னம் என்ற மூலத்தை... உயிரோட்டத்திற்கான உற்பத்தி ஸ்தானமாகக் கொள்கிறது இந்தக் கலை.

இந்த சத்தியத்தை, ஜீவன் தனது கர்மவினைகளை ஒவ்வொன்றாக அனுபவிக்கும் போது உணர்ந்து கொள்கிறது. இதை விளக்குவதற்காகத்தான், தாருகாவனத்தில் ரிஷிகள், 'ஜோதிடத்தை ஆத்மாவுக்காகவும்... மந்திரத்தை மனதிற்காகவும்... ஔஷதம் என்ற மருந்தை உடலுக்காகவும்...' வகுத்தளித்தார்கள்.

இந்த ஆத்மகாரகரான 'சூரிய பகவான்', தனது சொரூபத்திற்கான மூலத்தை 'லக்னத்தின்' வாயிலாகவும்... அவரின் அருளை 'ஆதிபத்தியத்தின்' வாயிலாகவும் வெளிப்படுத்துகிறார்.

ஸாய்ராம்.

                                                                                          


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...