நனவு என்ற நிலையில் நானும், எனக்கு முன்னால் இந்த உலகமும், அதில் இருக்கும் படர்க்கை என்ற ஜடம் மற்றும் உயிரினங்களும் இருக்கும். இது அனைவருக்கும் அனுபவமாகும்.
அது போலவே, கனவு என்ற நிலையிலும், நானும், எனக்கு முன்னால் ஒரு உலகமும், அதில் இருக்கும் படர்க்கை என்ற ஜடம் மற்றும் உயிரினஙளும் இருக்கும். இதுவும் அனைவருக்கும் அனுபவமாகும்.
ஆனால், துயில் என்ற தூக்கத்தில் நான் என்ற அனுபவம் மட்டும்தான் இருக்கும். அதுவும் தூக்கம் கலைந்த பின்தான் அந்த அனுபவமும் தெரிய வரும்.
நனவு, கனவு மற்றும் துயில் என்ற மூன்று நிலைகளிலும் இருக்கும் ஒரே நிலை 'நான்' என்ற அனுபவம் மட்டுமே. ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலையில் இல்லாததற்குத்தான் மாயை என்று பெயர்.
ஆதலால், இந்த உலகமும், அதிலிருக்கும் படர்க்கை என்ற ஜடம் மற்றும் உயிரினங்களும் மாயையாகும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment