'ஒரு முறை ஆஞ்சநேயருக்கும், ஒரு பக்தருக்கும் இடையே ஒரு போட்டி நிலவியது. அது, 108 கற்களை ஒவ்வொன்றாக எடுத்து, அருகில் உள்ள கிணற்றில் போட வேண்டும்.யார் முதலில் போடுகிறார்களோ... அவர்களே வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவர்... என்பதுதான் போட்டியின் தாராம்ஸம்.'
'ஆஞ்சநேயர் ஒவ்வொரு கல்லாக எடுத்து, அதில் 'பகவான் இராமபிரானது' பெயரைப் பொறித்து, அதன் பின்னர், அதைக் கிணற்றில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், ஆஞ்சநேய பக்தரோ, ஒவ்வொரு கல்லிலும், 'பகவான் ஆஞ்சநேயரின்' பெயரைப் பொறித்து, அதன் பின்னர், அதை ஒவ்வொன்றாகக் கிணற்றில் போட்டுக் கொண்டிருந்தார்.'
'இறுதியில் வெற்றி பெற்றது, ஆஞ்சநேய பக்தர்தான். இது எவ்வாறு நிகழ்ந்தது...? என்று, ஆஞ்சநேயப் பிரபு, பகவான் ஸ்ரீ இராமபிரானிடம் கேட்கும் போது, பகவான், 'ஆஞ்ஞநேயா... ! பகவானை விட பாகவதன் உயர்ந்தவன், அவனைவிட உயர்ந்தவன் பாகவத பக்தன்...!' என்று பகர்ந்தார்.'
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment