பகவான் ஸ்ரீ இராமபிரான், பிள்ளைப் பிராயத்திலிருக்கும் போது, அவரது தந்தையாரான, தசரத மகாராஜா, அவரின் முன்னழகை ரசிப்பதற்காக, 'ராமா, இங்கே வா... !' என்று அழைப்பார். வந்து நிற்கிற இராமரை ரசித்துப் பார்த்து விட்டு, ' சரி... ராமா, சென்று வா... !' என்று சொல்லி, அவர் செல்லும் போது அவரது பின்னழகிக் கண்டு ரசிப்பாராம்.
இதைத்தான், கம்ப நாட்டாழ்வார், தனது 'இராமகாதையில்', பகவான் இராமரை வருணிக்கும் போது,
'தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல்
கமலமன்னத் தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கைக் கண்டாரும் அஃதே வாள் கொண்ட
விழியார் யாரோ வடிவினை முடியக் காண்பார் ... ! '
... என்று சிலாகிருத்திருப்பார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment