Wednesday, August 26, 2020

பிரகார வலம் வருதலின் சூட்சுமம்.


         

மாட்டை மேய விடுவதற்காக, அதை நல்ல புற்கள் மிகுந்திருக்கும் பகுதியில், ஒரு குச்சியை ஊன்றி, ஒரு குறிப்பிட்டுள்ள சுற்றளவு மேய்வதற்கு வசதியாக, ஒரு கயிற்றைக் கொண்டு கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

பசியுடன் இருக்கும் மாடு, முதலில் பரபரப்புடன் மேய ஆரம்பிக்கும். கயற்றின் நீளத்திற்கு ஏற்ப, புற்களைச் சாப்பிடும் மாடு, தன்னையறியாமல் மெதுவாக அந்தக் குச்சியை சுற்ற ஆரம்பிக்கும். தனது கழுத்தில் கட்டியிருக்கும் கயறும், மெதுவாக அந்த குச்சியைச் சுற்ற ஆரம்பிக்கும்.

ஒரு வட்டத்தின் விளிம்பிலிருந்து புற்களைச் சாப்பிடும் மாடு, மெதுவாக நகர்ந்து, நகர்ந்து, அந்த வட்டத்தின் மூலமான குச்சியை நோக்கி நெருங்க ஆரம்பிக்கும். இப்போது மாட்டின் மேயும் பகுதி மெதுவாகக் குறையும். தனது கழுத்தில் கட்டியிருக்கும் பெரும் பகுதிக் கயிற்றின் நீளம், அந்தக் குச்சியை சுற்றியபடி இருப்பதால், நீளம் குறைந்து, சுற்றுவதற்கு வழியில்லாமலும்... மேய்வதற்கும் புற்கள் இல்லாமலும்... வயறு நிறைந்ததாலும்... மாடு அமைதியுடன் அமர்ந்து, தான்  வாய்ப் பகுதியில் சேமித்து வைத்திருக்கும் புற்களை அமைதியாக அசை போட ஆரம்பிக்கும்.

அதுபோலத்தான், ஆலயங்களின் பிரகார வலம் வருதலும். பரபரப்புடனும், அவசர அவசரமாகவும். மனதில் சுற்றுக்களை எண்ணியபடியே, ஆரம்பிக்கப்படும் பிரகார வலம்... சற்று நேரத்தில் பரபரப்பும் குறைந்து, வேகமும் குறைந்து, எண்ணிக்க்கையும் மறந்து, மனம் தன்னையறியாமல், எந்த எண்ணமும் இன்றி , அதுவாக ஒடுங்க ஆரம்பிக்கும்.

இப்போது, ஓரிடத்தில் அமர்ந்து, கண்களை மூட... எந்த வித சிரமமுன்றி மனம் தானாக உள் திரும்புதலை... எல்லோரும் அனுபவிக்கலாம்.

இதுதான், பிரகார வலம் வருதலின் சூட்சுமம்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...