Tuesday, July 7, 2020

அகத்தியப் பெருமான் அளித்த... 'நாடி ஜோதிட அனுபவம்'




'ஜோதிடக் கலையில்' ஈடுபாட்டுடன் இருக்கும் எனக்கு, 'நாடி ஜோதிடத்தைப்' பற்றிய நேரடி அனுபவம் இல்லாதிருந்த காலம் அது. 

2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில், எனது உறவினரும், நண்பருமான ஒருவருக்கு, அவரது தொழில் ரீதியாக... ஜோதிட ரீதியிலான ஆலோசனையை வழங்கியிருந்தேன். தொழிலுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் போது... அதில் சில சந்தேகங்கள் நிலவியதால்... இன்னும் சற்றுத் தெளிவான வழிகாட்டுதல் தேவையாக இருந்தது.

அப்போது, அந்த நண்பர், 'நாடி ஜோதிடத்தில், இதற்கான தெளிவு கிடைக்க வாய்ப்புிருக்குமா... ?' என்ற கேள்வியை முன்வைத்தார். அதுவரை, எனக்கு அந்தத் துறையில் நேரடி அனுபவம் ஏதுமில்லாததால், நான் அறிந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 

'நாடிகள் என்பது ரிஷிகளின் கைப்பட எழுதிய ஓலைகள். அவற்றில், 'ஜீவனின் பிறவிகள் பற்றிய 'வாழ்க்கைக் குறிப்பும்' அடங்கியிருக்கும். அந்த ஓலைகளில் ஜோதிடக் கலை விவரிக்கும், லக்னம் முதலான பனிரெண்டு பாவங்களைப் போல, பொதுக் காண்டம் முதல் மோக்ஷக் காண்டம் வரை விரிந்திருக்கும். முதலில் பார்க்கப்படுவது பொதுக் காண்டம்தான். அதற்குப் பிறகு தேவையெனில், மீதிக் காண்டங்களைப் பார்க்கலாம். காண்டங்களைப் பார்ப்பதற்கு, ஒருவரின் வலது  கை பெருவிரல் ரேகை மட்டும் போதுமானது. பொதுவாக அகத்தியர், வசிஷ்டர், சுகர் மகிரிஷிகளின் நாடிகள் இருந்தாலும், பெரும்பாலும் அகத்திய மகிரிஷ்யின் நாடி பிரபலமாக இருக்கிறது.'

ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நண்பர், 'அகத்தியர் நாடி பார்ப்பதற்கான விபரங்களுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்'. என்று கூறி விட்டுச் சென்றார். அடுத்த நாளே, 'மத்தியப் பேருந்து நிலையத்திற்கு' அருகில் (எங்கள் ஊர் திருச்சிராப்பள்ளி), திண்டுக்கல் சாலையில் இருக்கும் ஒரு பிரபல 'நாடி ஜோதிடரின்' முகவரியுடன் வந்தார். அன்றே, அந்த முகவரிக்குச் சென்றோம். அங்கு வரவேற்பரையில், எங்களது பெயர், நட்சத்திரம், பிறந்த தேதி முதலிய விபரங்களைப் பெற்றுக் கொண்டு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு, வரும் போது, ஒரு குறிப்பிட்டத் தொகையைக் கூறி, அதைச் செலுத்தமாறும் கூறினர்.

நான் அறிந்ததற்கும்... தற்போது நடப்பதற்கும்... உள்ள மாறுபாடுகளைக் கண்டு திருப்தியில்லாத நிலையில், அன்று மாலை, எனது 'சத்குருவின் திருவடியில்', ஒரு பிரார்த்தனையை வைத்தேன். 'சுவாமி, அகத்திய மகிரிஷியின் வாக்கை கேட்பதற்கு, எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்... ! அந்த பாக்கியத்தை அருளுங்கள், சுவாமி... !' என்று. 

அன்று இரவு, வீடு திரும்பும் போது, மின்சார சாதனங்களை பழுதுபார்க்கும் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம், எனது நாடி சம்பந்தமான சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்ட போது, அவர், எனது கருத்துக்களை ஆமோதித்து, அதற்கேற்ப, புற நகர்ப் பகுதியான 'காட்டூரில்' ஒரு நாடி ஜோதிடரின் விலாசத்தைக் கொடுத்தார்.

அடுத்த நாள், அவர் கொடுத்த முகவரிக்குச் சென்று, அந்த ஜோதிடரைச் சந்தித்தோம். மிகச் சாதரணமாக இருந்த அவர், மரத் தடுப்புள்ள  உள் அறைக்கு அழைத்துச் சென்றார். அவரது இருக்கைக்குப் பின், அகத்திய மகிரிஷியின் உருவப் படமும்... ஊதுவத்தியின் சுகந்த மணத்துடன்... எனது குரு நாதரின் உருவப் படமும்... இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

எங்களை அமரவைத்து, நண்பரின் வலது கை பெருவிரல் ரேகையை பெற்று, அதை 'அகத்திய மகிரிஷியின் திருவடியில்' வைத்துவிட்டு... அங்கிருக்கும் ஓலைக் கட்டுகளில் ஒன்றை எடுத்து... ஒவ்வொன்றாகப் பிரித்து... ஒவ்வொரு ஓலையினையும் எடுத்து... 'நான் உங்களது தந்தையின் பெயரை, ஒரு சில, உள் குறிப்புடன் சொல்வேன். நீங்கள் ஆமோதித்தால், பின் உங்களது பெயரையும், உங்களின் நட்சத்திரத்தையும் சொல்வேன்... நீங்கள் உறுதி சொன்னால், பின்னர் ஓலையைப் படிக்கலாம், என்னிடம் பொதுக் காண்டம் மட்டுமே உள்ளது.' என்று ஆரம்பித்தார்.

முதல் ஓலைக் கட்டில் நண்பரின் தந்தையைப் பற்றிய குறிப்புகள் இல்லாததால், இரண்டாவது கட்டை எடுத்து, சில ஓலைகளைப் படித்த பின், ஒரு ஓலையை படிக்கும் போது, 'யாசகம் கேட்போன்...' என்ற குறிப்பொன்றைக் கூற, அதை நாங்கள் ஆமோதித்தோம். ஏனெனில், நண்பரின் தந்தையின் பெயர்... 'திரு.பிச்சை'. தொடர்ந்து, நண்பரின் பெயரையும், அவரின் நட்சத்திரத்தையும், லக்னம் முதலான இராசியின் அமைப்பையும்... நண்பரின் வாழ்க்கைக் குறிப்பையும் ரத்தினச் சுருக்கமாக விவரித்து... பின் அதை அவ்வாறே ஒரு 40 பக்க நோட்டில் எழுதி... அதை அகத்திய மகிரிஷியின் திருவடியில் வைத்து எடுத்துத் தந்தார்.

முதன் முதலாக மகிரிஷியின் வாக்கைக் கேட்ட ஆனந்தத்தில்... அதைப் பெற்றுக் கொண்டு, அவருக்கான தக்ஷ்ணையைக் கேட்ட போது, ஆச்சரியத்தில் மூழ்கி விட்டடேன்.  காரணம், நாஙகள் முன்னிரு தினங்களுக்கு முன்னர் சந்தித்த... நாடி ஜோதிடரின் அலுவலகத்தில்... அவர்கள் கேட்ட தொகையின் '6 ல் 1 பகுதியைத்தான்' இவர் கேட்டார். எங்கள் மனம் திருப்தியுறும் வகையில் ஒரு தொகையை, அகத்திய மகிரிஷியின் திருவடியில் சமர்ப்பித்து, அவரையும் அடியேனது குருநாதரையும் வணங்கி வந்தோம்.

ஆம், நமக்கு ஒரு துன்பம் நேரும் போது, நாம் அணுக வேண்டியது இறைவனைத்தான், அவசியம் இருந்தால், அவர், நம்மை ஒரு ஜோதிடரிடம் அனுப்பி வைப்பார்... !'

ஸாய்ராம்.

3 comments:

  1. Sir,antha agathiya nadi jothidar vilasan kidaikuma sir.... Nan poi pakanum sir...

    ReplyDelete
    Replies
    1. அவரின் முகவரி :
      திரு. கனகவிஜயன், அகத்தியர் ஜோதிட நிலையம், காட்டூர், திருவரம்பூர், திருச்சி 13. (நான் அவரை சந்தித்தது 2004 ல்)

      Delete
  2. Ipavum pakurangala sir... avanga irukangala ilaya endru sola mutiyuma sir..

    ReplyDelete

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...