தியானத்திற்கு எது மூலம்... ?
ஆதி யோகியாகிய சிவபெருமானாரை, நாம் தியானிக்க வேண்டுமெனில், அந்த ஆதியோகி, யாரை தியானிக்கிறார்... ?
தியானத்திற்கு மூலமாக இருப்பது... நமது மனதின் உற்பத்தி ஸ்தானம்தான். அந்த உற்பத்தி ஸ்தானத்தில் நம் கவனத்தை வைப்பதே, பூரண தியானமாகும்.
எண்ணங்கள், ஜீவனின் சக்தியாகிய வாயுவின் மீது பயணம் செய்கிறது. எண்ணங்கள் உற்பத்தியாவது மனதில்தான். அந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்கு, நமது கவனம் திரும்பும் போது, ஜீவ சக்தியாகிய வாயுவும்... அந்த முலத்தில் ஒடுங்கிவிடுவதை உணரலாம்.
ஆம், ஜீவனின் மூலமாக இருப்பது ஜீவ சக்தியாகிய வாயுதான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment