Saturday, July 4, 2020

ஸாயீயின் கீதங்கள்




சீரடி ஸாயீயின் சமஸ்தானம் - ஸாயீ
குருவைத் தேடி வந்த குருஸ்தானம்
ஞானிகள் கடவுளின் அவதாரம் - புவி 
மாந்தரின் இருளகற்றும் ஒளிதீபம்.

பாலகனாய் பரம்பொருள் பாதம் பதித்த பூமி,
யவ்வனத் துறவியாய் தவத்தில் அமர்ந்த பூமி,
பக்கிரியாய் நடந்து உணவை இரந்த பூமி,
பாவங்கள் தொலைத்திடும் கங்கையே சீரடி பூமி.               (சீரடி... )

சாலைகள் ஊருக்கு வழிகாட்டி - உயர்
கோபுரம் கோவிலின் வழிகாட்டி
குருவே இறைவனின் வழிகாட்டி - பெரும்
பிறவி பிணி தீர்க்கும் கைகாட்டி.                                                 (சீரடி... )

பாவங்கள் துகளாய் திருகையில் நைந்த பூமி,
நன்மைகள் பூக்களாய் பூத்து சிரித்த பூமி,
வினைகள் விறகுகளாய் எரிந்து அழிந்த பூமி,
நித்திய இன்பத்தை அளித்திடும் புண்ணிய பூமி.                  (சீரடி... ) 

சீரடி ஸாயீயின் சமஸ்தானம் - ஸாயீ
குருவைத் தேடி வந்த குருஸ்தானம்
ஞானிகள் கடவுளின் அவதாரம் - புவி 
மாந்தரின் இருளகற்றும் ஒளிதீபம்.

(26.1.2005 அன்று, பகாவான் ஸாயீயின் கருணையினால்... அடியவனின் மனதில் உதித்த பாடல். 4.7.2020, குரு பூர்ணிமா நாளான இன்று, ஸாயீயின் பக்தர்களுக்குச் சமர்ப்பணம்.)

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...