ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கம் தந்தாய் போற்றி !
தாயினும் பரிந்து சாலச் சகரை அணைப்பாய் போற்றி !
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம், துணைக்கரம் கொடுப்பாய் போற்றி !
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பை வைத்து, சாரத்தைத் தருவாய் போற்றி !
ஞாயிறே நலமே வாழ்க ! நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உள நாள் மட்டும், போற்றுவோம், போற்றி ! போற்றி !!
(கவிஞர் கண்ணதாஸன் அவர்களுக்கு நன்றி)
ஸாய்ராம்.

No comments:
Post a Comment