Sunday, June 21, 2020

ஆயிரம் கரங்கள் நீட்டி...





ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கம் தந்தாய் போற்றி !

தாயினும் பரிந்து சாலச் சகரை அணைப்பாய் போற்றி !

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம், துணைக்கரம் கொடுப்பாய் போற்றி !

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !

தூரத்தே நெருப்பை வைத்து, சாரத்தைத் தருவாய் போற்றி !

ஞாயிறே நலமே வாழ்க ! நாயகன் வடிவே போற்றி !

நானிலம் உள நாள் மட்டும், போற்றுவோம், போற்றி ! போற்றி !!

(கவிஞர் கண்ணதாஸன் அவர்களுக்கு நன்றி)

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...