Friday, June 19, 2020

ஸாயீ, அப்போதும்... இப்போதும்... எப்போதும்... நடத்தும் லீலைகள்.




அண்ணார் திரு.V. ராஜ்மோகன் அவர்கள். அடியேனை 21 வருடங்களுக்கு முன்னர்...  ஸாயீ பந்துவாக... ஸாயீயின் திருவடிகளுக்குள் கொண்டு சேர்த்தவர். எங்களது எண்ணற்ற குரு தேடலுக்கான பயணங்களில் ஒன்றாகவே பயணித்திருக்கிறோம். அவருக்கு,1999 ன் ஆரம்பத்தில் ஸாயீ பகவான் அருளிய அனுபவத்தைத்தான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது வியாபார சம்பந்தமான சென்னைப் பயணத்தின் போது... தங்கியிருந்த விடுதியிலிருந்து ஆட்டோவில்... அவரது வழக்கறிஞரைப் பார்க்கச் சென்றார். ஆட்டோவில் ஏறி அமர்ந்தபின்தான் தனக்கு இருபுறமும் 'ஸாயீ மகானின்' படங்கள் ஒட்டியிருப்பதைப் பார்த்தார். பாபாவைப் பற்றிய எந்த விவரங்களையும் அவர் அறிந்திராததால்... ஏதோ, அவர் இஸ்லாமிய அவுலியாக்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

ஆட்டோவிலிருந்து இறங்கி வழக்கறிஞரின் அலுவலகத்திற்குச் சென்ற போது... அவரது இருக்கைக்குப் பின்னால்... 'ஸாயீ மகானின்' திருவுருவப்படம் மாட்டியிருப்பதைப் பார்த்து... சற்று ஆச்சரியத்தில்தான் முழ்கிப் போனார். மீண்டும், இரண்டாவதுமுறையாக... அந்த அவுலியாவின் தரிசனம். அப்போதும், அவரைப் பற்றிய எந்த விவரணத்தையும் அறிந்து கொள்ளாமல்... தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு... கிளம்பினார்.

சாலைக்கு வந்ததும்... 'சார்... போகலாமா... ?' என்ற குரலைக் கேட்டு திரும்பிய போது... தான் வந்த அதே ஆட்டோ நிற்பதைப் பார்த்து மீண்டும் அதியத்தில் ஆழ்ந்தார். ஏனெனில் சென்னையில் சில மணி நேரத்திற்குள் ஒரே ஆட்டோவை மீண்டும் பார்ப்பது அரிதானால்தான். ஆட்டோவில் ஏறியபின்...சற்று ஆழ்ந்து அந்த அவுலியாவைப் பார்த்தார். இது ஒரே நாளில் நிகழ்ந்த மூன்றாவது தரிசனம்.

திருச்சிக்குத் திரும்பிய அடுத்தா நாள் காலையில், அலுவலக அறைக்கு வந்து... அன்றைய தினசரிப் பத்திரிக்கையைப் புரட்டிய போது... பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார், காரணம் நான்காவது முறையாக... அதே அவுலியாவின் தரிசனம். திருச்சியில், மணிகண்டத்திற்கு அருகில் முடிகண்டம் என்ற சிற்றுரில், 1998 ல் ஸ்தாபிக்கப்பட்ட 'ஸாயீ பகவானின்' திருக்கோவிலின் வருடப் பூர்த்தியின் அழைப்பிதழ்தான் அது.

இனிமேல் தாமதிக்கக் கூடாது, என்று நினைத்தவர், அந்த அவுலியாவை தரிசனம் செய்ய... பூஜை சாமான்களுடன் முடிகண்டத்திற்குக் கிளம்பி விட்டார். அங்கு சென்று, துவாரகமாயியில், ஸாயீயின் சித்திர ரூபத்திற்கு முன் வீழ்ந்து வணங்கிய போதுதான்... இவர்தான் என்னை ஈர்த்துக் கொண்ட... எனக்கேயான 'சத்குருநாதர்' என்பதை உணர்ந்து... ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப் போனார்.

ஆம், ஸாயீயின் லீலைகள், அப்பொதும்... இப்போதும்... எப்போதும்... தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...