நாம் வெளிப்படுத்தும் சொற்கள்... எவ்வளவு வல்லமையானது, என்பதை விளக்க... எங்களது குருநாதர் வழங்கிய ஒரு சிறிய கதை...
'ஒருவனது தலையைச் சுற்றிய படியே விஷப் பூச்சி ஒன்று பறந்து கொண்டிருந்தது. கண்களையும், தனது கைகளால் காதுகளையும் பொத்திக் கொண்டு... அமைதியாக அமர்ந்திருந்தவன்... விஷப் பூச்சியின் ரீங்காரம் சற்று ஓய்ந்ததும்... 'அப்பாடா... !' என்று வாயைத் திறந்தான். அதுவரை காத்திருந்த அந்த விஷப் பூச்சி... சட்டென்று அவனது வாயில் புகுந்து கொண்டது.'
இந்தக் கதையைக் கூறிய குருநாதர்... 'அது போலத்தான் அப்பா... ! ஆரம்பத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பழகி விட்டு... இறுதியில் கோபமாக ஒரு சொல்லை வெளியிட்டு விட்டால்... அந்தச் சொல்லே... அந்த மொத்தப் பழக்கத்திற்கும் எமனாகிப் போய்விடும். நாம் ஒருவரை விட்டு விலகும் போது உதிர்க்கும் இறுதிச் சொற்கள்தான்... அடுத்து சந்திப்புக்கு... ஆரம்பமாக இருக்கும். ஆதலால், ஆரம்பத்திலிருந்து எச்சரிக்கையுடன் பழகுவதைப் போலவே... விலகும் தருவாயிலும் எச்சரிக்கையுடன் பழகி... விலக வேண்டும்... !' என்று விளக்கம் அளித்தார்.
ஆம், பகைமை பாராட்டாமல் விலகும் யுக்திக்குப் பெயர்தான்... 'ஞானம்'.
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment