ஒரு நரி தனது உணவைத் தேடி... சூரிய உதயத்தின் போது பயணத்தை ஆரம்பித்தது. அப்போது, அதன் நிழல்... அதற்கு முன்னே மிக நீண்டு, பெரியதாகத் தோன்றியது. 'ஓகோ... இதுதான் நமது உருவமோ... !' என்று நினைத்துக் கொண்ட நரி, யானையைப் போன்ற ஒரு பெரிய மிருகம்தான் இன்று நமக்கு உணவாகத் தகுதியானது... என்று எண்ணி... யானையைத் தேடி அழைந்து கொண்டிருந்தது.
முற்பகல் நேரத்தில், தனது நிழல் சிறிதாவதைக் கண்டு... தன் உணவுத் தேடலால்... தான் கொஞ்சம் இளைத்து விட்டதாகக் கருதி... தனது இரையின் தேடலை மான்களின் பக்கம் நோக்கித் திருப்பியது.
அதற்குள் மதிய நேரம் நெருங்கிவிடவே... தனது நிழல் மிகவும் சுருங்கி... தனது காலடிகளுக்குள் மறைந்து போவதைக் கண்ட நரி... தான் பசியால் மிகவும் இளைத்துப் போனதாகக் கருதி... கிடைக்கும் உணவை உண்டு தன்னை திருப்தி செய்ய கொள்ள வேண்டி... உணவு கிடைத்தால் போதும் என்ற மன்நிலைக்கு வந்துவிட்டது.
அது போலத்தான், நாமும்... நமது பேராசையால்... நமது தகுதியை மறந்து தேடிக் கொன்டிருக்கிறோம். எப்போது நமது தகுதி நமக்குத் தெரிய வருகிறதோ... அப்போதிருந்துதான்... நமது தகுதிக்கேற்றவற்றைத் தேட ஆரம்பிக்கிறோம்.
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment