Friday, June 5, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 120 ; 'திருமணப் பொருத்தத்தில் ஜாதகத்தின் பங்கு' பகுதி - 3




வரன்களின் ஜாதகங்களைத் தனித் தனியாக ஆய்வு செய்வதென்பது... இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

பெயர் பொருத்தம்... நட்சத்திரப் பொருத்தம்... என்ற வரைமுறைகள், சமூகம் ஒரு அறிமுக வளையத்துகுள் இருக்கும் வரை... மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எப்போது, ஒரு அறிமுக சமூகம்... அந்த வளையத்திற்கு வெளியே தமது... வாழ்வை விரித்துக் கொண்டதோ... அப்போதே, வரன்களைப் பற்றி அறிந்து கொள்ள... அவர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள... ஜாதகத்தின் துணை மிக அவசியமானதொன்றாகிறது.

பெண்களின் ஜாதகத்தில்...

~  லக்னம் (1 ஆம் பாவம்)...
~ குடும்பம் (2 ஆம் பாவம்)...
~ தைர்யம் (3ஆம் பாவம்)...
~ பூர்வம் (5 ஆம் பாவம்)...
~ களத்திரம் (7 ஆம் பாவம்)...
~ மாங்கல்யம் (8 ஆம் பாவம்)...

... என்ற பாவங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது... அந்தப் பெண்ணின் விருப்பு, வெறுப்புகளும், குண நலன்களும்... ஒரு புரிதலுக்குள் வந்து விடும். அது மட்டுமல்ல, பெண்ணின் பலம் மற்றும் பலவீனங்களும் ஒரு புரிதலுக்குள் வந்து விடும். இப்போது, அதற்கேற்றவாறு, ஒரு வரனைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ஆண்களின் ஜாதகத்தில்...

~ லக்னம் (1 ஆம் பாவம்)...
~ சுகபாவம் (4 ஆம் பாவம்)...
~ பூர்வம் (5 ஆம் பாவம்)...
~ களத்திரம் (7 ஆம் பாவம்)...
~ பாக்கியம் என்ற தர்மம் (9 ஆம் பாவம்)...
~ ஜீவனம் என்ற கர்மம் (10 ஆம் பாவம்)...

... என்ற பாவங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பொது... அந்த ஆண் மகனின் அனைத்து அம்சங்களும் ஒரு புரிதலுக்குள் வந்து விடும். அந்த ஆணின் குண நலன்களும்... பலம் மற்றும் பலவீனங்களும்...தெரிந்ததற்குப்பின் பின், அதற்கேற்றவாறு, வரன்களைத் தேர்வு செய்வது... இன்றைய சூழலுக்கு மட்டுமல்ல... எப்போதும், அது ஒரு நிறைவான பொருத்த முறையாக அமையும்.

மெலும், இந்த தனித்தனியான ஜாதக ஆய்வில்... இரண்டு வரன்களும் இதுவரை கடந்துள்ள 'தசாக்கள்' எவ்வாறு இருந்தது... என்றும், இனி, இருவரும் இணையும் போது கடக்கப் போகும் தசாக்களும் எவ்வாறு இருக்கும்... என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த தசாக்களுக்கான ஆய்வுதான்... இருவரும் இணைந்து பயணிக்கும் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கவிருக்கிறது. இந்த தசாக்கள்... 

~ இருவருக்கும் யோகமான தசாக்களாக அமையும் போது, அது உத்தமமாகவும்,
~ ஒருவருக்கு யோகமாகவும்... ஒருவருக்கு சமமாகவும் இருக்கும் பக்ஷத்தில், மத்திமமாகவும்,
~ இருவருக்கும் சமமான பலமுடைய தசாக்களாக இருக்கும் பக்ஷத்திலும் மத்திமமாகவும்,
~ ஒருவருக்கு யோகமாகவோ, சமமாகவோ இருந்து மற்றவருக்கு அது யோகமற்று இருந்தால் அதமமாகவும்,
~ இருவருக்கும் யோகமற்ற, சமமற்ற தசாக்கள் நடக்கும் பக்ஷத்திலும் அதமமாகவும்...

... எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த தசாக்களின் பொருத்தம் மிக, மிக முக்கியமானது. குறிப்பாக, குறைந்தது ஒரு 5 வருடங்களுக்காகவாவது சுபமான தசைகளை... வரன்கள் கடக்க வேண்டியது அவசியம். எனெனில், அந்த ஆரம்பக் காலங்கள்தான், அன்பை வெளிப்படுத்துவதற்கும்... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடப்பதிற்கும் ஏற்ற காலம். அதை நம் குழந்தைகளுக்கு அளிப்பது மிக அவசியம்.

இறைவனின் அருளால்... ஜாதகப் பொருத்தம் என்ற இந்த தனித்தனி ஜாதக ஆய்வின் முக்கியத்துவத்தின் வழியே... இதுவரை பயணித்தோம். தொடர்ந்து வேறு பல ஜோதிடத்தின் சூட்சுமங்களுக்குள்ளும் பயணிப்போம்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...