ஜோதிடக் கலை, 'விஞானமும்'... 'மெய்ஞானமும்' கூடிய கலையாகும். இந்தக் கலை 'வான சாஸ்த்திரத்தையும்'... 'கணிதவியலையும்'... அடிப்படையாகக் கொண்டது.
ஜோதிடக் கலை... விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியாக இருப்பது... 'ரிஷிகள்' வகுத்துள்ள 'பஞ்சாங்கம்தான்'.
பஞ்சாங்கம் என்பது, பிரபஞ்சத்தில் உலவும் கிரகங்கள்... விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் மூலமான சூரியனையும்... இவை, அனைத்தையும் பூமியுடன் இணைக்கும் சந்திரனையும்... அறிந்து கொள்ளும் முழுமையான... 'வான சாஸ்த்திரத்தையும்', ;கணிதமுறைகளையும்; உள்ளடக்கிய விஞ்ஞானமாகும்.
இந்த 'வானசாஸ்திர விஞ்ஞானத்தை'... அன்றைய ரிஷிகள் தங்களது 'மெய்ஞானத்தின் வழியாகத்தான்' அறிந்து கொண்டார்கள். அவர்கள், தங்களது 'அந்தர் ஞானம்' என்ற உள் நோக்குதாலால்... 'அண்டத்தில் உள்ளது அனைத்தும்... இந்தப் பிண்டத்தில் உள்ளது...' என்ற, 'ஞான திருஷ்டியைக்' கொண்டு... மிகத் துல்லியமாக இவற்றை அறிந்து கொண்டார்கள்.
வானசாஸ்த்திரத்தின் வழியாக அறிந்து கொண்ட இவையணைத்தையும்... பூமியுடன் இணைத்துப் பார்க்கக் 'கணித முறை' தேவைப்பட்டது. அந்தக் கணித முறையை ரிஷிகள், நாழிகைகள்... நொடிகள்... விநாடிகள் என்ற கணக்கீடுகளின் மூலம் வகுத்தார்கள்.
அந்தத் கணக்கீட்டு முறைகள் மூலம்... கோள்கள் மற்றும் விண்மீன்களின் சுற்றுப் பாதைகள்... அவற்றின் தொலைவு... மேலும், பூமியிலிருந்து, அவற்றின் அமைவு மற்றும் அவற்றின் சுழற்சிக் கால அளவுகள் என்று... அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டார்கள்.
அவற்றை,
~ வாரம் என்ற 'கிழமைகளாகவும்'...
~ சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையேயான தூரத்தை கணக்கிட்டு அதைத் 'திதிகளாகவும்'...
~ திதிகளை வகுத்துக் 'கரணங்களாகவும்'...
~ சந்திரனின் சுற்றுப் பாதைக்கு ஆதாரமாக இருக்கும் 'நட்சத்திரங்களாகவும்'...
~ சந்திரன், நட்சத்திரத்தின் பகுதிகளைக் கடப்பதை 'யோகங்களாகவும்'...
... ஐந்து வகைகளாக வகைப்படுத்தி... அதை 'பஞ்சாங்கம்' என்ற துல்லிய கணக்கீட்டு முறையாக வகுத்தளித்திருக்கிறார்கள். இந்த பஞ்சாங்கமே முழுமையான விஞ்ஞான அறிவுக்கான சாட்சி.
இந்த பஞ்சாங்கத்தில், மெய்ஞானத்தின் வழியான வான சாஸ்த்திர விஞ்ஞானமும்... மெய்ஞானம் கூடிய கணித சாஸ்த்திர விஞ்ஞானமும்... ஒன்றாய்க் கலந்திருப்பதை கலந்திருப்பதைக் காணலாம்.
இந்த பஞ்சாங்கத்தை உள்ளடக்கிய ஜோதிடக் கலையை, விஞ்ஞானமாகவும் அணுகலாம்... மெய்ஞானமாகவும் அணுகலாம்.
இதை விஞ்ஞானமாக அணுகும் போது, கிரகங்களையும் அவற்றின் சுழற்சிகளைப் பற்றியும்... விண்மீன்கள் என்ற நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியுமான... வான் வெளி அறிவுப் பாதையில் பயணிக்கலாம்.
அதுவே, மெய்ஞானமாக அணுகும் போது, கிரகங்களின் சுழற்சி... பூமியில் இருக்கும் ஜீவர்களின் வாழ்வினை... எவ்வாறு பிரதிபலிக்கின்றன... என்ற ஜோதிடக் கலையின் முன்னறிவிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடக் கலையை, விஞ்ஞானமாக அணுகும்போது... அதற்கு உலக வாழ்வின் பயணத்திற்குத் தேவையான... உலக அறிவு தேவைப்படுகிறது. மெய்ஞானமாக அணுகும் போது... உள் வாழ்வு என்ற ஆன்மீகத் தேடலின் மூலமான பரமாத்ம சொரூபத்தின் அனுக்கிரகம் தேவைப்படுகிறது.
ஸாய்ராம்/

No comments:
Post a Comment