அறிவுக்கும்... புத்திக்கும்... ஞானத்திற்கும்... மூலமானவராக, ஜோதிடக் கலையில்... 'புத பகவான்' அங்கம் வகிக்கிறார்.
இந்த ஜீவனுக்கு மூலமாக... சத்து-சித்து-பரமானந்த சோரூபியான 'ஆத்மாவே' இருக்கிறார். அதை அறியாத ஜீவன், அறிவாகவும்... புத்தியாகவும்... ஞானமாகவும்... தனக்குள்ளே இருக்கும், அந்த பூரணத்தைப் புறத்தே தேடுவதைத்தான்... அறிவுக்கான தேடுதல் என்றும், ஞானத்திற்கான தேடுதல் என்றும் வகைப்படுத்திக் கொள்கிறது.
இந்த அறியாமைக்கு மூல காரணமாக அமைவது ஜீவர்களின் 'கர்ம வினைகள்தான்'. அந்த 'அறியாமைக்குள்' இருந்து தவிக்கும் ஜீவனால், கண்ணுக்குத் தெரியும் புற உலகின் மீது, தனக்கு இருக்கும் நம்பிக்கை, கண்ணுக்குத் தெரியாத அக உலகத்தின் மீது இருப்பதில்லை.
ஒருவரது ஜாதகத்தில் அமையும் 'சூரிய-புத பகவான்களின் இணைவு' புற அறிவுத் திறமையயியும்... 'புத-சந்திர பகவான்களின் இணைவு' புத்திசாலித்தனத்தையும்... வெளிப்படுத்துகிறது. இவை இரண்டுமே, கர்ம வினைகளின் கட்டுக்குட்பட்டதான தேடுதல்களாகவும்... அடைதல்களாகவும்... மட்டுமே இருக்கும்.
ஆனால், ஒருவரது ஜாதகத்தில் 'குரு-புத பகவான்களின்' இணைவு... கட்டுக்குட்படாத... அக உலகத் தேடுதல்களுக்கான கதவுகளைத் திறந்து விடும். அந்த எல்லையில்லாத... என்றும் மாறாத... சுய ஒளிப்பிரகாசத்தில் கொண்டு சேர்க்கும்.
தன்னை அறிந்தவன்... அனைத்தையும் அறிந்தவனாகிறான்... என்ற பூரணத்துவத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை, இந்த 'குரு-புத பகவான்களின் இணைவில் அல்லது தொடர்பில்' ஒருவருக்கு ஏற்படுகிறது.
ஆகவே, 'புத-சூரிய பகவான்களின் இணைவு'... அறிவையும், 'புத-சந்திர பகவான்களின் இணைவு'... புத்திசாலித்தனத்தையும், 'புத-குரு பகவான்களின் இணைவு... ஞானத்தின் கருவூலத்தையும் திறக்கின்றன.... என்பது மிகையானதல்ல.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment