திருமணத்திற்கு வரனைத் தீர்மானம் செய்வதற்கு முன்... அவர்களின் ஜாதகத்தை தனித் தனியாக ஆய்வு செய்து... வரன்களைப் பற்றிய ஒரு ஆய்விற்குப் பின்.. இணைப்பது ஒரு சிறந்த முறையாக இருக்கும்.
உதாரணமாக... தனது பெண்ணுக்கு உரிய வரன்... நிரந்தர உத்தியோகம்... நிறைந்த வருவாய்... வீடு, வாகன வசதிகள்... கொண்ட வரனாக இருக்க வேண்டும்... என்று எண்ணுவது நியாயமானதுதான். அதே நேரத்தில்... தனது பெண்ணின் குணத்திற்கு ஏற்ற வரனாக அவர் இருப்பாரா... ? என்பதைத்தான் முதலில் உறுதி செய்ய வேண்டும்.
அதை உறுதி செய்வதற்கு... தனது பெண்ணின் குணநலன்களை நன்றாக அறிந்திருப்பவர்களான பெற்றோர்கள்... அந்த குணநலன்களை... அவரது ஜாதகம் வெளிப்படுத்துகிறதா... ? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு, தனது பெண்ணின் ஜாதகத்தை... தனக்கு உகந்த ஜோதிடரிடம் காட்டி... அதில் தமது பெண்ணின், லக்னம்... குடும்பம்... தைர்யம் மற்றும் தொடர்பு ஸ்தானம்... பூர்வம்... சயனம்... மாங்கல்யம்... என்ற ஸ்தானங்களை ஆய்வு செய்து... அதைத் தனது பெண்ணின் குணநலன்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்ணைப் பெற்றவர்களுக்குத் தங்களது குழந்தையின் பலமும்... பலவீனங்களும்... 'உள்ளங்கை நெல்லிக் கனி போலத்' தெரிந்து விடும். இப்போது தனது பெண்ணிற்கு அமையும் வரன்களில்... தனது பெண்ணின் பலவீனங்களை, பலப்படுத்தும் அமைவு... அந்த வரனின் ஜாதகத்தில் இருக்கிறதா... ? என்பதும், தனது பெண்ணின் பலமான அமைவுகளை, ஏற்றுக் கொண்டு... அதை பக்குவமாகக் கையாளும் அமைவு... அந்த வரனின் ஜாதகத்தில் இருக்கிறதா... ? என்பதும்... தெளிவாகத் தெரிந்து விடும்.
பலவீனங்களை... பலத்தைக் கொண்டு சமன் செய்வதுதான்... ஜாதகங்களை இணைக்கும் சூட்சுமம். திருமணம் ஒரு வியாபாரம் அல்ல. ஒரு வியாபாரத்திற்கு பங்குதாரரை சேர்க்கும் போதுதான்... இரண்டு பலமான ஜதகர்களை இணைக்க வேண்டும். அதிலும், பணம் உள்ளவரோடு... நிர்வாகத் திறமையுள்ள ஒருவரை இணைப்பதும்... வெற்றியைத் தேடித்தரும். அது, தேடுதல்களைப் பொருத்தது. பணத்தோடு பணத்தையா... ? அல்லது பணத்தோடு திறமையையா... ? என்பதைப் பொருத்தது.
ஆனால், திருமணம் இரண்டு பாலினங்களை இணைப்பது. இரண்டு மனிதர்கள் இணைந்து... இறுதி வரை வாழ்வைத் தொடர்வது. வியாபாரத்தைப் போல... இது லாப - நஷ்டங்களைப் பொருத்ததல்ல. இது இன்ப - துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இணைபிரியா பந்தம்.
ஆதலால், களத்திரம்... தொடர்பு... பங்குதாரர்கள்... நட்பு... கலவியல்... என்ற, 7 ஆம் இடத்தை மட்டும் பார்த்து பொருத்தும் நிலையைத் தவிர்த்து... பலம் - பலவீனம் என்ற இரு நிலைகளையும் சமப்படுத்தும் பொருத்த முறையைக் கையாள வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம்.
தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளால்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment