ஒரு முற்பகல் வேளையில்... பாபா தூனிக்கருகில் அமர்ந்திருந்தார். அமைதியாக இருந்த துவரகமாயியில்... அவருக்குப் பின்னாலிருந்து ஒரு பல்லியின் முக்கம் கேட்டது.
அதைக் கவனித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், 'பாபா...! அந்தப் பல்லி என்ன சொல்கிறது...?' என்று கேட்டார். தூனியிலிருந்து தனது பார்வையை உயர்த்திய பாபா, 'அவளது சகோதரி, அவளைப் பார்க்க இன்று இங்கு வரப் போகிறாள்... அதைத்தான் அந்தப் பல்லி சொல்லுகிறது...!' என்றார்.
பாபா, ஏதோ வேடிக்கையாகத்தான் சொல்லகிறார்... என்று நினைத்த பக்தர்... அமைதியாக அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில், துவாரகமாயிக்கு எதிரில் மண்டப வாயிலில்... குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய வண்டி ஓட்டி, அருகிலிருந்தவர்களிடம், 'நான் ஔரங்கபாத்திலிருந்து வந்திருக்கிறேன். குதிரைக்கு கொஞ்சம் கொள்ளு வாங்கி வருகிறேன்... அதுவரை, வண்டி இங்கேயே... நிற்கட்டும்...' என்று சொல்லி விட்டு, வண்டிக்குக் கீழே வைத்திருக்கும் ஒரு சாக்குப் பையை எடுத்து உதறினார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தரிடம், பாபா, 'அங்கு கொஞ்சம் கவனி... !' என்றார். அந்த வண்டியோட்டி உதறிய சாக்குப் பையிலிருந்து... ஒரு பல்லி கீழே விழுந்தது. விழுந்த பல்லி... பக்தரின் ஆச்சரியத்திக்கிடையே... விறு... விறுவென... ஓடிவந்து, துவாரகமாயியின் வாசல் படிகளில் ஏறி... பாபாவிற்கு பின்னாலிருக்கும் சுவற்றின் மீது ஏறியது.
ஏறிய பல்லியை நோக்கி... முக்கமிட்ட பல்லி ஓடிவந்தது. தனது சகோதரியைக் கண்ட சந்தோஷத்தில்... அந்த பல்லியை முத்தமிட்டு மகிழ்ந்தது. பின்னர் சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்து தட்டாமாலை விளையாடினார்கள். இதையெல்லாம் வெகு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பக்தரின் மனதில்...
~ பல்லியின் முக்கத்திலிருந்து... பாபா, எவ்வாறு இந்த அற்புதத்தை ஒரு முன்னறிவிப்பாக அறிவித்தார்... ?
~ ஔரங்காபாத்திலிருந்து அந்த சகோதரி பல்லி வருவதை எவ்வாறு கண்டு பிடித்தார்... ?
~ அந்த வண்டியோட்டிக்குத் தெரியாமல்... அந்த பல்லி எவ்வாறு அந்தச் சாக்குப் பையில் அவ்வளவு நேரமாக ஒளிந்திருந்தது... ?
... என்ற கேள்விகள் எழுந்தன.
எத்தனையோ பல்லிகள் எல்லா நேரங்களிலும் முக்கமிடுகின்றன. அதில் ஏன் இந்தப் பல்லியின் முக்கச் சத்தத்திற்கு மட்டும் இந்த முக்கியத்துவத்தை பாபா கொடுத்தார்... ? அந்த முக்கத்தை, அந்த பக்தர் கவனித்து, ஏன் அதை ஒரு கேள்வியாக மாற்றினார்... ?
இதற்கெல்லாம் பதில் ஒன்றுதான்... இந்த லீலை நமக்கு வெளிப்படுத்துவது... பாபாவின் 'அந்தர் ஞானத்தைதான்'.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment