ஒரு பக்தன் தனது இன்பத்தின் வழியேயான பயணத்தில்... தன் காலடிகளுக்கு இணையாக எண்ணற்ற காலடிகளின் தடயங்கள் இருப்பதைக் கண்டான். பகவானுடைய காலடித் தடங்களும் அதில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில்... மகிழ்வுடன் பயணித்துக் கொண்டிருந்தான்.
அவனது வாழ்வின் பாதையில் 'இரட்டைச் சுழல்கள்' என்ற துன்பத்தின் வழியேயான... வாழ்க்கைப் பயணம் துவங்கியது.தன்னோடு பயணித்த அனைத்துக் காலடித் தடங்களும் சுவடுகளே இல்லாமல் மறைந்து போனது. விரக்தியில் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற பக்தன்...
'பகவானே... ! எனது இன்பத்தின் வாழ்வின் வழியே... என்னோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த நீங்கள்... தற்போதைய... எனது துன்பத்தின் காலத்தில் மட்டும்... என்னை தனியே தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டீர்களே... இது நியாயமாகுமா... ?'
பகவான் சொன்னார், ' நன்றாகப் பார்... ! அது என்னுடைய காலடித் தடயங்கள்தான்... நான்தான், உன்னை சுமந்து கொண்டு செல்கிறேன்,,, !' என்றார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment