உறக்கத் தறியாம லூட்டல்போற் புத்தித்
திறததர் தா முந்த்தெரியா தேயுள் - ளுறப்புகுந்து
நம்மைத் திருத்திமன நாசஞ்சய் சத்கிருபை
யம்மே ! யளப்பற் றது.
சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...
உறக்கதில் அறியாமல் ஊட்டல் போல புத்தித்
திறத்தார் தாமும் தெரியாதே உள்ளுறப் - புகுந்து
நம்மைத் திருத்தி மனம் நாசம் செய்யும் சத் கிருபை
அம்மே ! ஆளப்பற்றது.
பொருள் :
நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நம்மை அறியாது... நமக்கு உணவு ஊட்டும் தாய் போல... நாம் எவ்வளவு அறிவுத் திறமானவர்களாக இருந்தாலும்... அதையெல்லாம் மீறி... நாமறியாமலேயே நமது அகத்துள் புகுந்து நமது மனதை நாசம் செய்து... நம்மை நம் ஆத்மாவுக்குள் நிலை நிறுத்தும் ஆற்றல் மிக்க... அருள் திறம் மிக்க சத்குருக்களின் 'சத்சங்கம்' இருக்கிறதே... அந்த கருணை அம்மா ! அளப்பறியது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment