'தண்டென் றன் மாருதமுன் றன்விசிறி வீணெ'ன்றின்
றண்ட ரிறைரம ணாசிரியென் - விண்ட
வுரையுண்மை மேன்மை யுணர்ந்துசற் சங்க
வரையுட் புகுந்துவாழ் வோம்.
சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...
தண்டு என்ற நல் மாருதம் முன் நன் விசிறி வீண் என்று
ஈண்ட இறை ரமணாசிரியன் - விண்ட
உரை உண்மை மேன்மை உணர்ந்து சத்சங்க
வரையுள் புகுந்து வாழ்வோம்.
பொருள் :
நல்ல மாருதம் என்ற தென்றல் வீசும் போது... கையில் இருக்கும் விசிறியின் பயன் தேவையற்றது போல... நமது இறைவனான ரமண சத்குரு... தாமாகக் கண்டு உணர்ந்த... ஆத்மாவில் நின்று தன்னை உணரும் 'சத்சங்கம்' என்ற அனுபவ வரையருட்குள் புகுந்து... நாமும் அந்த ஆத்ம சங்கமத்தில் திளைப்போம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment