நாமறிய நல்ல விவேகந் தலைப்படலை
நாமேசா தித்ததா நம்பாதே - தாமயல்போ
லண்மை யிருக்குஞ்சத் தாள ரருட்டிறத்தா
லுண்மையுந்தி யூட்டப்படும்.
சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...
நாமறிய நல்ல விவேகம் தலைப்படலை
நாமே சாதித்தாய் நம்பாதே - தாம் அயல் போல
அண்மை இருக்கும் சத்தாளர் அருள் திறத்தால்
உண்மை உந்தி ஊட்டப்படும்.
பொருள் :
தொடர்ந்து நமக்குள்ளே ஆத்ம விசாரம் என்ற சத்சங்கத்தில் நிலைத்து நிற்கும் போது... நமக்கு விவேகம் என்ற நித்யா நித்ய வஸ்த்துக்கள் பற்றிய தெளிவு ஏற்படும். அதை நாம்தான் சாதித்தோம் என்று நம்பாதே. தமக்கு அயல் போல நம்மை விட்டு விலகியிருந்து... நம்மை வழிநடத்தும்... சத்குருக்களின் அருளினால்தான்... அந்த விவேகம் நமக்கு ஊட்டப்பட்டது... என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேன்டும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment