Sunday, May 3, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 7.





சற்புருட ரோடே சகவா சஞ் செய்யுங்கா
னித்தியா நித்தியத்தி நிண்ணயமும் - பக்தியும்
உள்ளத்திற் றாமேமே லோங்கி வளருவதைத்
தெள்ளத் தெளிந்தறிய லாம்.

சற்று ... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்புருஷரோடு சகவாசம் செய்யும்கால்
நித்தியா நித்திய நிர்ணயமும் - பக்தியும்
உள்ளத்தில் தாமே மேலோங்கி வளருவதைத்
தெள்ளந்த் தெளிந்து அறியலாம்.

பொருள் :

சத்சங்கம் என்பது, சத்தியம் என்ற ஆத்மாவுடன் நித்தியமாக சகவாசம் செய்வது. அவ்வாறு செய்யும் போது... பக்தியும்... நித்தியா நித்திய வஸ்துக்களை பகுத்தறியும் விவேகமும்... தாமே தமக்குள் ஓங்கி வளர்வதை தெள்ளந் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...