சற்புருட ரோடே சகவா சஞ் செய்யுங்கா
னித்தியா நித்தியத்தி நிண்ணயமும் - பக்தியும்
உள்ளத்திற் றாமேமே லோங்கி வளருவதைத்
தெள்ளத் தெளிந்தறிய லாம்.
சற்று ... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...
சத்புருஷரோடு சகவாசம் செய்யும்கால்
நித்தியா நித்திய நிர்ணயமும் - பக்தியும்
உள்ளத்தில் தாமே மேலோங்கி வளருவதைத்
தெள்ளந்த் தெளிந்து அறியலாம்.
பொருள் :
சத்சங்கம் என்பது, சத்தியம் என்ற ஆத்மாவுடன் நித்தியமாக சகவாசம் செய்வது. அவ்வாறு செய்யும் போது... பக்தியும்... நித்தியா நித்திய வஸ்துக்களை பகுத்தறியும் விவேகமும்... தாமே தமக்குள் ஓங்கி வளர்வதை தெள்ளந் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment