Saturday, May 2, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 6.





சத்சங்க  மென்னுந் தனிபெரும் பாகியச்சீ
ருற்றொர்க்கீ டில்லை யுலகேழின் - பொற்குவையும் ;
தாண்டரிய வஞ்ஞான சாகரத்தைத் தாண்டியவ
ரீண்டரிய வீடுறலா லே.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்சங்கம் என்னும் தனிப்பெரும் பாக்கியச் சீர்
பெற்றோர்க்கு ஈடில்லை உலகு ஏழின் - பொற்குவையும்
தண்டரிய அஞ்ஞான சாகரத்தைத் தாண்டியவர்
ஈண்டு அரிய வீடுறலாலே.

பொருள் :

சத்சங்கம் என்ற... தனது ஆத்ம சங்கமத்தில் ஊன்றியிருக்கும் பெரும் பாக்கியத்தை பெற்றவருக்கு... இந்த ஏழு உலகத்தின் பொன்னாலான குவியல்களைக் கொண்டு வந்து குவித்தாலும்... அதற்கு ஈடாகாது. ஏனெனில், தண்டுவதற்கு அரிய இந்த பிறவி என்ற பெரும் சாகரத்தை அவர்... இந்த ஆத்ம சங்கமம் என்ற சத்சங்கத்தில் ஈடுபட்டு அடைவதாலே.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...