ஏனைய அனைத்து உயிரினங்களுக்கும் 'சுவாதீனமாக' இருக்கும் சுவாசம்... மனிதனுக்கு மட்டும் பின்னப்பட்டு... இடகலை... பிங்கலை... என பிரிவதற்குக் காரணம்... அவன் சுமந்து வந்திருக்கும் 'கர்ம வினைகளே'.
கர்ம வினைகள் வெளிப்படுத்தும் எண்ணங்களும்... அதற்கேற்ப தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் மனிதனின் செயல்பாடுகளும்... சுவாசத்தின் சீரமைப்பைக் குழைத்து... அதனை பின்னப்படுத்திவிடுகிறது.
இதை சீராக்க வேண்டுமெனில்... மனிதன் தனது எண்ணங்களை செயல் படுத்தும் போது... அதைக் கடமையாகக் கொண்டு... விளைவுகளில் பற்று வைக்காமல்... ஒரு 'கர்ம யோகியாக' செயல்படும் போது... இந்த சுவாசம் தாமாகச் சீராவதை உணரலாம்.
இந்தக் 'கர்ம யோகத்தைத்தான்'... ஞானிகள், மனிதர்கள் கடைபிடிப்பதற்கான உத்தம வழியாக வலியுருத்தினார்கள். ஆனால், எப்போதும் 'குறுக்கு வழியையே' விரும்பும் மனித மனம்... இந்த 'இடகலை - பிங்கலை' என்ற இரு சுவாச நிலை... ஒன்றாகும் 'சுழுமுனை' என்ற 'சுவாதீனத்தை'... 'வாசி யோகம்' என 'யோக முறையாகக்' கடைப் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
ஞானிகள், தமது எண்ணங்களை, மூலத்திலேயே ஒன்றி விடச் செய்வதால்... அவர்களின் கவனம்... எண்ணங்களின் மீது இல்லாமல்... மூலத்திலேயே ஒன்றியிருக்கும். அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவே... அவர்களுக்கு எண்ணங்களும் வெளிப்படும். ஆதலால், அவர்களுக்கு சுவாசம்... சுழுமுனையில்... எப்போதும் சுவாதீனமாக இருக்கும்.
ஆனால், இந்த சூட்சுமத்தை அறியாத மனிதர்கள்... தமது சுவாசத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம்... தனது எண்ணங்களைக் கட்டுப் படுத்தி விடலாம்... என்ற தவறான நடைமுறையை... 'வாசி யோகமாகக்' கடைபிடித்து வருகிறார்கள்.
சுவாசத்தை தம் இஷ்டம் போல வளைப்பது... வாசி யோகமாகாது. சுவாசத்தைக் கவனிப்பதுதான்... வாசி யோகமாகும். அந்த சுவாசத்தைக் கவனித்து... அதன் வழியாக நமது எண்ணங்களை... அதன் 'மூலமான ஆத்மாவில்' கொண்டு சேர்ப்பதுதான்... வாசி யோகப் பயிற்சியாகும்.
இவ்வாறு, நமது எண்ணங்களைக் கவனித்து... அதனை, அதன் மூலமான ஆத்மாவில் கொண்டு லயிக்க வைத்தால்... 'வாசி'... யோகமாகிறது. இது, ஆத்ம சாதகர்களுக்கு உரியது.
ஆனால், கர்ம வாழ்வில் உழலும்... சாதாரன மனிதர்களுக்கு... கடமைகளை பற்றற்று முடித்து... அதன் பலன்கள் மேல் பற்று வைக்காத நிலையான... 'கர்ம யோகமே... சுவாசம் சீராகும் 'சுழு முனையாக'... 'வாசி யோகமாக' மாறும்.
இதுவரை, வாசி யோகத்தைப் பற்றிய சில ஆய்வுகளை பரிசீலித்தோம்... இறைவனின் அருளால்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment