மனிதனுக்கு மட்டுமே உரியதான 'கர்ம வினைகளின்' விளைவுகளான எண்ணங்கள்... அலையலையாக வெளிப்படும் போது, அந்த எண்ணங்களுக்கு ஏற்ப... சுவாசம், இடகலையாகவோ... பிங்கலையாகவோ... நாசித் துவாரத்திலிருந்து வெளிப்படுகிறது.
அதே நேரத்தில்... தமது வாழ்வு முழுவதையும்... 'இறைவனின் திட்டப்படியே' எந்த வித மாற்றமுமில்லாமல்... தாம் எந்த விதத்திலும் அந்தக் 'கர்ம வினை திட்டத்தில்' குறுக்கிடாமல்... இறைவனின் சித்தத்தின் படியே... தமது வாழ்வு முழுவதையும் நடத்தும் ஏனைய ஜீவன்கள் அனைத்துக்கும்... சுவாசம் 'சுவாதீனமாகிறது'.
அதாவது, தமது இரு நாசித் துவாரங்களிலிருந்தும்... சுவாசம் சீராக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். அதனால்தான்... சுவாசம் எப்போதும் சீராக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்... உலகின் மிகப் பெரியு உயிரினமான... யானையின் தும்பிக்கையை எடுத்து... சுவாச சீரமைப்பு சரியாக இல்லாத மனிதர்கள் தம் தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.
இந்த சுவாச சீரமைப்பு இல்லாத நிலைக்கு... மனிதர்களுக்கு, இறைவன் அளித்திருக்கும்... கர்ம வினைகள் வெளிப்படுத்தும் செயல்களுக்கு ஏற்ப 'முடிவு எடுக்கும் உரிமைதான்'... காரணமாகிறது.
அவர் இந்த உரிமையை மனித இனத்திற்கு மட்டும் அளித்திருப்பதற்கான நோக்கம்... மனிதன் தனது 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' இந்தப் பிறவியை அடைந்திருக்கிறான். இந்தப் பிறவியில் இறைவன் நமக்கு அளித்திருக்கும், அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு... அவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும்... தர்மத்திற்குக் கட்டுப்பட்டு... கடமைகளை பற்றற்று நிறைவேற்றி... மீண்டும் ஒரு பிறவியை எடுக்காமல்... இறைவனின் திருவடியில் கலந்து விடுவதற்க்காகத்தான்.
இந்தப் 'பற்றற்று கடமைகளை பூரணத்துவமாக்கும்' தன்மை... உருவாகும் போது, மனம் எப்போதும் அமைதியாகவும்... சுவாசமும் எப்போதும் சீராகவும்... நம்மையறியாமலேயே சுவாசம்... சுவாதீனமாவதையும் உணரலாம்.
இந்த இயல்பான 'சுவாச சீரமைப்பான'... 'சுழுமுனை' என்ற 'சுவாச சுவாதீனமாதலைத்தான்'... 'வாசி யோகம்' என்றழைத்தனர் ஞானிகள். இந்த வழியிலான... இயல்பான 'கர்ம யோகத்தின் வழியேயான' சுவாசச் சீரமைப்பைத்தான்... எல்லா மனிதர்களுகம் கடைப் பிடிக்க வேண்டும்... என்றும் வலியுருத்தி வந்தனர்.
ஆனால், எதையும் 'குறுக்கு வழியில்' தேடும் மனித மனம்... இயல்பாகவே, இந்த 'சுவாசக் கட்டுப்பாடான'... சுழுமுனை நிலையை... ஒரு வித்தை என்று கருதி... 'வாசி யோகம்' என்று தமது முயற்சியால் முனைந்து பார்ப்பதுதான்... கேள்விக்குறியாகிறது.
அதைப்பற்றிய ஒரு ஆய்வை தொடர்ந்து பார்ப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.
No comments:
Post a Comment