Wednesday, April 15, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'மீன் விற்கும் பெண்ணும்... அவளது மீன் கூடையும்...'




ஒரு மீன் விற்கும் பெண், சந்தையில், தனது மீன்களை எல்லாம் விற்றுத் தீர்த்தபோது இரவாகி விட்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுதை, தனது பூ விற்கும் தோழியின் வீட்டில் கழிக்க வேண்டியிருந்தது.

மீன் கூடையை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு... பூக் கூடைகளிருந்த அறையில்... தனது தோழியுடன் படுத்து உறங்கச் சென்றாள். ஆனால், பூக்களின் வாசனையால்அவளுக்குத் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்த, தோழி, 'ஏன், புரண்டு... புரண்டு... படுத்துக் கொண்டிருக்கிறாய்... ஏதாவது சிரமாக இருக்கிறதா...?' என்று கேட்டாள்.

'எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, இந்தப் பூக்களின் வாசனைதான் என்னைத் தூங்கவிடாது தடுக்கிறது போலும். எனது மீன் கூடையைக் கொஞ்சம் தருகிறாயா...? அந்த வாசனை என்னைத் தூங்க வைக்கும் என்று நினைக்கிறேன்'' என்றாள். அதைக் கேட்ட தோழி, மீன் கூடையைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தக் கூடையில் சிறிது தண்ணீரைத் தெளித்ததும்... அதிலிருந்து மீன் வாசம் வந்தது. அந்தக் கூடையைத்  தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டதும்... ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

அது போலத்தான்... 'இறைதேடலும்'. அந்த தேடுதலின் பாதையில்... தனக்கு ஏற்படும் புதிய அனுபவங்களை... ஏற்றுக் கொள்ளாத மனம்... மீண்டும் 'உலகவாழ்வு' என்ற 'பழைய வாசனைக்கே' திரும்பிவிடுகிறது.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...